கொக்கரக்கோவின் வனவாசம் (குறுங்கதை)

பெருமாள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருபோதும் தனிமையில் இருந்ததில்லை. வைதேகிக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது என்பதால் அவள் எப்போதுமே வீட்டில்தான் இருப்பாள். அதன் காரணமாக பெருமாள் அவன் வீட்டில் எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்று சொல்லலாம். விதிவிலக்காக சென்ற ஆண்டு, மூன்று மாதம் மும்பை சென்றிந்தாள் வைதேகி. அவள் பெருமாளை விட்டுப் பிரிந்தால் அவன் குடித்துக் குடித்தே செத்து விடுவான் என்று என் நண்பர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஒரு விஷயத்தை அடிக்கடி சொன்னால் நாமும் … Read more

ஔரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி…

ஹார்ப்பர்காலின்ஸ் உலகின் மிகப் பிரபலமான பதிப்பகம். இந்தியாவிலும் அப்படியே. இருந்தாலும் இந்தியாவில் ஹார்ப்பர்காலின்ஸில் பிரசுரம் ஆனாலும் அமெரிக்காவிலோ யு.கே.யிலோ நம் புத்தகம் பிரசுரம் ஆக வேண்டுமானால் அந்த நாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு பதிப்பகம்தான் பிரசுரம் செய்ய வேண்டும். அதற்கு நமக்கு ஒரு லிடரரி ஏஜெண்ட் தேவை. மற்றபடி வெளிநாடுகளில் ஔரங்ஸேப் கிண்டில் எடிஷன் கூடக் கிடைக்காது. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வளன் Conversations with Aurangzeb நாவலை இருபது பிரதிகள் வாங்கி தன் அமெரிக்க … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் (13)

ஜப்பான் பயணம் பற்றி ஏன் தொடர்ச்சியாக எழுதவில்லை என்று கேட்டு சில கடிதங்கள் வந்தன. ஒரே காரணம்தான். எழுத வேண்டிய பல விஷயங்கள் ரொப்பங்கி இரவுகளில் வருகின்றன. ரொப்பங்கி இரவுகளுக்காக பல நாவல்களைப் படித்துக் கொண்டும், பல திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இங்கே இப்போது எழுதினால் நாவலை வெளியிடும்போது ஏற்கனவே படித்ததாக ஆகி விடும். நாவலில் வராத விஷயங்களை வேண்டுமானால் இங்கே எழுதலாம். ஜப்பானில் பத்து நாட்கள் இருந்தேன். அதில் ஒருநாள் செந்தில் அவர் இல்லத்துக்கு … Read more