16. சத்தியத்தின் திறவுகோல்

ஒரு முறை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் வைத்து தெஹல்கா பத்திரிகையாளர் என்னிடம் ரேபிட் ஃபயர் பேட்டி எடுத்தார்.  முதல் கேள்வி.  எழுத்து என்றால் என்ன?  மது அருந்தாமல் நான் நிதானமாக இருக்கும்போது இப்படியெல்லாம் மடக்கினால் சுருண்டு விழுந்து விடுவேன்.  ஆனால் அந்தச் சமயம் பின்நவீனத்துவ சரஸ்வதி என் பக்கம் வந்து நின்று என் செவியில் மேஜிக் என்று ஓதினாள்.  நானும் ஒரு க்ஷணமும் யோசியாமல் மேஜிக் என்றேன். யோசித்துப் பார்த்தால் பி. சரஸ்வதி என் செவியில் ஓதியது … Read more

16. மௌனியைப் புரிந்து கொண்ட என் சகா

எஸ். ராமகிருஷ்ணன் அவரது கதா விலாசம் புத்தகத்தில் மௌனி பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுதியிருக்கிறார். மௌனி பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே ஆகச் சிறந்ததாக இதைக் கருதுகிறேன். நீங்களும் அவசியம் இதைப் படிக்க வேண்டும். அதன் இணைப்பு இது: அழியாச் சுடர்கள்: மௌனி- ஒரு புதிய அலை-எஸ்.ராமகிருஷ்ணன் (azhiyasudargal.blogspot.com)

15. மொழி எனும் மந்திரம்

சித்தர்கள் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  தகரத்தைத் தங்கமாக்கும் விஞ்ஞானமெல்லாம் அவர்களிடம் இருந்திருக்கிறது.  உணவு உண்ணாமலேயே பல காலம் இருப்பார்கள்.  உடலை பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கும் சித்தர்களும் உண்டு.  போகர் உருவாக்கிய நவபாஷாணத்தை நாம் அறிவோம்.  ஒன்பது வகை பாஷாணத்தை வேதியியல், இயற்பியல் முறைப்படி கட்டினால் கிடைப்பது நவபாஷாணம்.  விறகு மற்றும் ஒன்பது வகை வறட்டி மூலம் நவ பாஷாணங்களையும் திரவமாக்கி, பிறகு ஒன்பது முறை வடிகட்டி திடமாக்குவார்கள். புடம் போடுதல் என்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  வறட்டியின் அளவுக்கேற்ப … Read more

14. என் கத்தி கடவுளையும் கூறு போடும்…

அராத்துவின் விளக்கம் படித்தேன்.  உறங்கச் செல்வதற்கு முன் அதற்கு ஒரு பதில்.  ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இந்த விவாதத்தினால் வாசகர்களுக்குப் பயன் உண்டாகுமே தவிர அராத்துவுக்கு இதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.  அவரைப் பொருத்தவரை இது வெட்டிவேலையாகவே இருக்கும்.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டேன்.  எனக்கு, மொழி உடல்.  உள்ளடக்கம் ஆன்மா.  ஆன்மா மட்டும் இருந்தால் அது ஆவி.  இரண்டுமே எனக்கு முக்கியம்.  இதற்கிடையில் நான் உடலை ஆராதிப்பவன் வேறு.  ஒரு அழகிப் போட்டிக்கு … Read more

13. சரஸ்வதி சொன்ன விபரீத கதை

கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியர்கள் வரலாற்றைப் புறக்கணித்து விட்டார்கள்.  உலகில் எங்கும் இப்படி நடந்ததில்லை.  கிரேக்கத்தில் சாக்ரடீஸ் பற்றியும், அவருக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பு பிறந்த லெஸ்பியன் கவி Sappho பற்றியும் துல்லியமாக எழுதி வைத்திருக்கிறார்கள்.  அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதற்கு சிலைகள் இருக்கின்றன.  மேலை நாடுகள் முழுவதுமே கவிஞர்கள், ஓவியர்கள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், அரசர்கள் போன்றோர் பற்றிய எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. இந்தியாவில் கிடைப்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தாம்.  திருவள்ளுவர் மணமானவரா, துறவியா, ஹிந்துவா, சமணரா, எப்போது … Read more

12. ரஸியா, ஹோ ந ஜானா ரே…

ராகம் மாரு பிஹக்.  ரஸியா, ஹோ ந ஜானா ரே என்ற இந்தப் பாடலை பலரும் பாடியிருக்கிறார்கள்.  அதில் என்னை வெகுவாகக் கவர்ந்தது வெங்கடேஷ் குமார்.  இன்றைய ஹிந்துஸ்தானி இசையில் அவரையே நான் முதன்மை ஸ்தானத்தில் வைப்பேன்.  தினமும் காலை ஏழிலிருந்து எட்டு எனக்கு நடை நேரம்.  இன்று அந்த நேரத்தில் தொலைபேசியில் பேசுவதற்கு யாரும் கிடைக்காததால் வெங்கடேஷ் குமாரின் ரஸியாவைக் கேட்டேன்.  ஹர்ஷ் போரஸ் படேல் இயற்றியது.  இவர் யார் என்று என்னால் கண்டு பிடிக்க … Read more