இறைவிக்கு அளிக்கப்பட்ட அப்பம்

இறைவி!காற்றின் றெக்கைகளில் பறந்துமலர்களின் ரகசியங்களைச் சொன்னஎன் கவிதைகள்: இந்தப் பூமியின் களமாகமழைத் துளிகளால் நனைந்து,காற்றின் ஸ்பர்ஸத்தினால் நடுங்கும்என் உடல் அடர்ந்த இரவின்நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகமௌனத்தின் ஆழத்தில் மூழ்கிஒளியின் தேடலில் தவிக்கும்என் ஆத்துமா பூமியின் இருமுனையில் ஓடும்சிவந்த நதியாக,உன் உதடுகளில் தவழ்ந்து,புனிதமான பனியாக உருகி,பூமியின் இதயத்தில் தூங்குகிறது.என் குருதி பாறையில் செதுக்கப்பட்ட புராணம்உன் விரல்களின் தொடுதலில்பறவையாக மாறிஅனந்தத்தின் வானில் பறக்கிறதுஎன் எலும்பு நெருப்பின் மையத்தில் மறைந்த விதைஉன் மௌனத்தில் முளைவிட்டுஒரு மலராகஎல்லையற்ற இரவில் பூக்கிறதுஎன் எலும்பின் மஜ்ஜை என் … Read more

ஆகப் பெரிய வரம்

இறைவரிடம் எதுவுமே வேண்டுவதில்லைஏனென்றால்கிடைத்த வரங்கள் அதிகம் –நீரோடை போல ஓடும் அமைதியில்,ரகசியத் தோட்டத்தின்இலைகளுக்கிடையே மறைந்து,நேரத்தின் கண்ணாடியில்பிரதிபலிக்காத உருவங்கள் போல–அதில் ஆகப் பெரிய வரம்என் மனையாள்என் எழுத்தைப் படிக்காமல்இருப்பதுதான்.

நான்தான் ஔரங்ஸேப் – மலையாளத்தில் – றியாஸ் முஹம்மத்

நான்தான் ஔரங்ஸேப் நாவலை றியாஸ் முஹம்மத் மலையாளத்தில் மொழிபெயர்த்து முடித்து விட்டார். ஒரு வாக்கியத்தைக் கூட நீக்கவில்லை. அது ஒரு பெரிய மகிழ்ச்சி. நீளம் கருதி அடுத்த மொழிக்குப் போகும்போது சுருக்கி விடுவது ஆங்கிலத்தில் ஒரு கேடு கெட்ட விஷயமாக இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் வந்த மொழிபெயர்ப்பு மூல நூலில் மூன்றில் ஒரு பகுதிதான். ராஸ லீலாவில் அந்த ஆபத்து நடக்கவே கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால் எக்ஸைலை கொஞ்சம் சுருக்கியிருக்க வேண்டும். அது அடுத்த … Read more

பிரபஞ்ச லயம் – 2 (தினை விதைத்தால் தினை)

தகப்பனின் வளர்ப்பு மகன் அவன்.  ஆனாலும் அவனை தகப்பன் ஒருநாளும் வளர்ப்பு மகனென நினைத்ததில்லை.  மகன் மரீன் எஞ்ஜினியரிங் படிக்கிறான்.  இரண்டாம் ஆண்டு கட்டணம் கட்ட காசு இல்லை.  அம்மா மகனிடம் சொன்னாள்.  படிப்பைப் பாதியில் நிறுத்தி விடலாம்.  இங்கேயே சென்னையில் ஏதாவது ஒரு கல்லூரியில் பி.காம் மாதிரி ஒரு படிப்பில் சேர்ந்து கொள்.  அப்போது தகப்பன் விருப்பு ஓய்வு பெற்றதால் இரண்டரை லட்சம் கிடைத்தது.  தகப்பனைப் பரிசோதித்த மருத்துவர் உங்களுக்கு இன்னும் ஆறு மாதத்தில் ஹார்ட் … Read more

நிலவின் நிழலில் ஒலிக்கும் மௌனம்

என் கவிதையின் முதல் வாசகிஇன்று கடைசி வாசகியானாள்நான் பணித்த வேலைதான்இமயத்தில் கொடி நாட்ட வேண்டும்சாலைப் பயணமென்றால்வாகனத்தை நிறுத்திமீண்டும் கிளம்பலாம்இது மலையேற்றம்ஓய்விடங்கள் வரும்போதே ஓய்வுஅப்போதுதான் கவிதை அவள் எழுதும் ஆங்கிலம்மொழிபெயர்க்க முடியாத கவிதைஇருந்தாலும் முயல்கின்றேன் ’பிரேம த்ருதி படித்தேன்அமைதியான நீரில் விழும் நட்சத்திரமாய்அது என்னைத் தொட்டதுஅதன் பிரதிபிம்பம்என்றென்றும் என் இதயத்தில் ஒளிரும்இது வெறும் பாடல் அல்லஉன் இதயத்தின் நட்சத்திரக் கூட்டம்இதை நான்இரவில்ஒரு சிறிய தீச்சுடரைப் பிடிப்பது போலகையில் ஏந்திக் கொள்வேன்இந்த முழுமையான சிருஷ்டிக்குஎந்தத் தொடர்ச்சியும் தேவையில்லை…இது ஒரு வாழ்நாளுக்குப் … Read more