இன்று என்ன கிழமை? என்ன மாதம்?

அது எப்படி எல்லா நாளும்ஒரே நாளைப் போல் இருக்கிறது? ஐந்து மணிக்கு எழுகிறேன்காலைக்கடன் முடித்துஇருபது நிமிட தியானம்பூனைகளுக்கு உணவிடுகிறேன்சில கவிதைகளைப் படிக்கிறேன்ஓரிரு கவிதைகள் எழுதுகிறேன்ஏழரை மணிஅதே சாலைகளில் நடைஅதே மனிதர்கள்ஏர்ப்பாடில் அதே இசை ஏழே முக்கால்சங்கீதா உணவகம்மீடியம் காஃபிகடைசி வாயில் இனிப்பு எட்டு மணிஅவள் அழைக்கிறாள்நடந்தபடி ஒன்பது வரை பேசுகிறேன் வீடு திரும்பிபூனைகளின் மலம் அள்ளிபைகளில் போட்டுவெளியே வைக்கிறேன் சின்ன வெங்காயம் நறுக்கிபழைய சோறில் உப்பிட்டுநீராகாரம் அருந்துகிறேன் ஒன்பதரைமனையாள் எழுந்து வருகிறாள்வீடு பெருக்கி சுத்தம் செய்கிறாள்அவளுக்கும் நீராகாரம் … Read more

அடையாளம்

இலக்கிய நிகழ்ச்சிக்கானஓர் அழைப்பிதழைக் கண்டேன்பதினெட்டு பெயர்களுக்கு முன்னால்எழுத்தாளர் எனவும்நான்கு பெயர்களுக்கு முன்னால்கவிஞர் எனவும்போட்டிருந்ததுஎழுத்தாளரை எழுத்தாளர் என்று போடாமல்நடிகர் என்றோ டாக்டர் என்றோவாபோட முடியும்?எழுத்தாளர் எழுத்தாளர்கவிஞர் கவிஞர்இதில் என்ன அக்கப்போர்? எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்ததுஇப்படி எழுதியது தெரிந்தாலேஅது தற்கொலை பண்ணிக் கொள்ளும்எங்கள் வீட்டில் ஸோரோ இருந்ததுஎன்றுதான் சொல்ல வேண்டும்எழுத வேண்டும்ஸோரோவின் தர்க்கம் என்னவென்றுயூகிக்க முடிகிறதுநான் நாய்தான்ஆனால்எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறதே? சரி, பெயரைப் போட்டுத்தானேஎழுத்தாளர் என்று போடுகிறோம்?இல்லை,ஸோரோ ஒப்புக்கொள்ளாதுநாய் ஸோரோ என்று சொன்னாலேபாய்ந்து குதறி விடும்நாய் … Read more

பார்வை

தெருநாய் குரைத்ததுஏன் குரைக்கிறாய் என்றேன்பின்னே நிலவைப் பார்த்துத்தெருநாயென்றால்குரைக்காமல் என்ன செய்வேன்என்றது

ஒன்றுமில்லை

இரண்டு தினங்கள் கழித்துப் பேசினேன் ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது’‘ஒன்றுமில்லை’ இதயத்தை பாரம் அழுத்தியது சிறிய மௌனத்துக்குப் பிறகு தொடங்கினேன் ஹைடேக்கர்காலத்தை எப்படி மனித இருப்போடுஇணைக்கிறார்ஒரு பொருள் ஏன் இருக்கிறதுஏன் அது இல்லாமல் இல்லைஒரு குறிப்பிட்ட பொருளின் இருப்புஅது இருக்கும் காலத்தால்தானேஅர்த்தம் பெறுகிறது… ’ஏய் ஏய் நிறுத்துநான் விளையாடுவதேயில்லையென்றுநீதான்புகார் செய்கிறாய்விளையாடினால் கோபித்துக் கொள்கிறாய்என்னதான் செய்யட்டும், சொல்’என்றாள் சிரித்தபடி 2. நகரில் பல சிரிப்புப் பயிற்சி மையங்களைக்கண்டிருக்கிறேன்வயதானவர்களெல்லாம் அங்கேசிரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருப்பார்கள்பார்த்தால் நமக்கு அழுகை வரும்அது வேறு விஷயம் அம்மாதிரி … Read more

பிரார்த்தனை

1 பேரரசன்இரு மல்யுத்த வீரர்களைத்தோளில் சுமந்து மலை ஏறுபவன்மகன் மரணத்தின் விளிம்பிலிருந்தான்பேரரசன் வேண்டினான்‘என் உயிரை எடுத்துக் கொள்மகன் உயிரை விட்டு விடு’ மகன் பிழைத்தான்பேரரசன் நோய்மையில் வீழ்ந்துஆறு மாதத்தில் மறைந்தான் 2 வெர்னர் ஹெர்ஸாக்ம்யூனிச்சில் இருந்தான்தோழி பாரிஸில், மரணத்தின் விளிம்பில்சில மணி நேரங்களே கெடு’சாவதற்கு முன் உன்னைப் பார்க்க வேண்டும்’என்கிறாள் தோழி பனிப்பொழிவினூடேஅவன் நடந்தான்இருபத்திரண்டு நாட்கள்பாரிஸ் வந்துஅவளைப் பார்த்தான்தோழிஒன்பது ஆண்டுகள் உயிருடனிருந்தாள் 3 சாமான்யரும் பிரார்த்தனை செய்யலாமாஎனக் கேட்டாள் பிறிதொரு சமயம்அவள் சொன்ன சம்பவம் இது:அவளுக்கு வாகனம் … Read more