மனதால் நினைந்து…

’நீயெனைப் பிரிந்தால்உனக்கு இன்னொருத்திநீ சொல்வாய்,பிரேதங்கள் மீது நடந்து செல்வதாகஅந்தப் பிரேத வரிசையிலேநான் கிடப்பேன் கடைசியாக,இல்லையா?’ அடியேய்,நின் பெயரைமனதால் நினைந்துவாயால் சொல்லிநின்றேன் இருந்தேன்கிடந்தேன் திரிந்தேன் நாடாத மலர் நாடிநின் வாடாத மலர் அடிக்கீழ்வைத்தேன்கூடவேநினைந்து நைந்து கரைந்துருகிபுனைந்த என்கவிதை ஐநூறும் சாற்றினேன் இதற்கு மேலுமா சந்தேகம்?சரி, இனியொரு ஐநூறுபுனைவேன்அப்போதேனும்நம்புவாயாஎன் நந்தா விளக்கமே? (காலையிலிருந்து நம்மாழ்வாரையும் பெரியாழ்வாரையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றிய கவிதை இது. டி.எஸ். எலியட்டின் இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி டெக்னிக்கைப் பயன்படுத்தினேன். பல சொற்றடர்கள் இரண்டு ஆழ்வார்களிடமிருந்தும் பெற்றது.)