ஒரு இலக்கியப் பிரதியை எப்படி வாசிக்க வேண்டும்?

என்னுடைய குறுநாவலை வாசித்து அதற்கு எதிர்வினையாக எழுதிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய எண்பது புத்தகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு வரும் ராயல்டியை விட அதிகமாக என் கதைக்கு சன்மானம் அனுப்பியிருக்கிறீர்கள். ஒரு நண்பர் எழுதியிருந்தார். நீங்கள் இங்கே இருந்தால் இருப்பதிலேயே அதிகத் தரமான ஒயினை வாங்கிக் கொடுத்திருப்பேன். அது இயலாது என்பதால் இந்தத் தொகையை அனுப்புகிறேன் என்று ஒரு பெரும் தொகையை அனுப்பியிருந்தார். இன்னொரு சன்மானம். நூறு ரூபாய். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவன். … Read more

எல்லோரும் இன்புற்றிருக்க ஓர் வாழ்வியல் கையேடு (குறுநாவல் – விடுபட்டதும், சில எதிர்வினைகளும்…)

நாவலில் இந்த விவரம் விடுபட்டு விட்டது. சேர்த்துக் கொள்ளவும். பதிப்பகத்துக்கு எக்ஸ் என்ற நாமகரணம் சூட்டப்பட்ட புதிதில் பல நண்பர்கள் புவனேஸ்வரியிடமும் கோண்டி என்ற கோதண்டராமனிடமும் அந்தப் பெயர் பற்றிக் கேட்டார்கள். காரணம், உங்களுக்குத் தெரிந்ததுதான். எக்ஸ் என்ற நாவல் நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டு, இந்தியாவின் மிக முக்கியமான ஐம்பது புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நாவலின் பெயரில்தான் பதிப்பகத்துக்கும் பெயர் வைக்கப்பட்டது. ஆனால் … Read more