விழா பதிவுகள் – 20

ஃபெப்ருவரி 27 அன்று இளையராஜா விழா மட்டும் அல்லாமல் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியும் இருந்திருக்கிறது.  அதையும் விட்டு விட்டு நம் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.  என்ன, தேர்த் திருவிழா ஊர்த் திருவிழா கூட்டமாமே என்று கேட்டார் ப்ரஸன்னா ராமசாமி.  அரங்கில் மேடை சம்பந்தமான வேலைகளைச் செய்யும் போது ஜெகா கீழே விழுந்து கை மணிக்கட்டில் வீக்கம், கடும் வலி.  என்னிடம் சொல்லவில்லை.  அந்த வலியுடனேயே விழா … Read more

கோவை புத்தக வெளியீட்டு விழா

கோவையில் உயிர்மை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.  விழாவில் எக்கச்சக்க கூட்டம்.  பல ஆண்டுகள் கழித்து மலையாள எழுத்தாளர் இந்து மேனனை சந்தித்தேன்.  கவிஞர் புவியரசு, அக்னிபுத்திரன் ஆகிய நண்பர்களைச் சந்தித்தும் ஆண்டுகள் ஆகி விட்டன.  விழாவில் அவர்களைச் சந்தித்ததும் சந்தோஷமாக இருந்தது. இந்து மேனன்   அக்னிபுத்திரன், கவிஞர் புவியரசு விழா முடிந்த மறுநாள் காலை ஊட்டிக்கு அருகில் உள்ள மசினக் குடி என்ற காட்டுப் பகுதிக்குச் … Read more

விழா பதிவுகள் – 19

புத்தக வெளியீட்டு விழா நடந்த ராஜா அண்ணாமலை மன்றத்தின் கொள்ளளவு 800.  அவ்வளவு பேரும் வந்து விடுவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்த்தேன்.  அதில் எனக்கு சந்தேகமே எழவில்லை.  சென்ற ஆண்டைப் போல் நோட்டீஸ் அடிக்கவில்லை; 70000 ரூ செலவு செய்து நகரம் பூராவும் விளம்பர போர்டுகள் வைக்கவில்லை (காசு இல்லை).  தினசரிகளில் சென்ற ஆண்டைப் போல் விளம்பரம் கொடுக்கவில்லை.  இந்துவிலும் தினமணியிலும் மட்டும் இன்றைய நிகழ்ச்சியில் வந்திருந்தது.  ஆனாலும் 800 பேரை எதிர்பார்த்தேன்.  அதற்கு இரண்டே காரணங்கள்தான். … Read more

விழா பதிவுகள் – 18

ரங்கநாதன் கோதண்டராமனின் முகநூல் பதிவு: எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா அழைப்பிதழ் மின்னஞ்சலில். ஒவ்வொரு ஆண்டும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற முனைப்பிலேயே கழிந்து, இறுதியில் கலந்து கொள்ள முடியாமலேயே போய்விடும். இந்த ஆண்டும் அப்படித்தான் (சனிக்கிழமையாய் இருந்தும்). சாரு எழுதிய புத்தகங்களை உடனே வாங்க வேண்டும் என முனைந்ததில் அறம் பொருள் இன்பம் (அந்திமழை) கடைசிப் பக்கங்கள் (கிழக்கு) பழுப்பு நிறப் பக்கங்கள் (கிழக்கு) இன்று தபாலில் வந்து சேர்ந்து விட்டன. … Read more

விழா பதிவுகள் – 17

டியர் சாரு, கடந்த வாரம் நடந்த தங்களது புத்தக வெளியீட்டில் நானும் கலந்து கொண்டேன். முதன் முதலில் உங்களை நேரில் கண்டதும் அன்றுதான். இன்னும் என்னால் அந்த பிரமிப்பில் இருந்து மீள இயலவில்லை. சிறு வயதில் எங்களது கிராமத்தின் அருகில் நடைபெறும் தேர்திருவிழா கடைத்தெரு போல இருந்தது. அத்தனை excitement. அத்தனை கொண்டாட்டம். பிற வாசகர்களைப் போல் நிரம்பப் படித்தவனில்லை நான். கொஞ்சம் இலக்கியப் பரிச்சயம் உண்டு. உங்களது அட்டகாசமான எழுத்து நடைக்கு நிகர் பிறிதொரு எழுத்து … Read more

ஒரு இனிய சந்திப்பு

நேற்று மாலை பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்தவுடனே வரவேற்றது வோட்கா.  Pug இன நாய்.  தரையில் அமர்ந்து அதோடு கொஞ்சி விளையாடி விட்டுத்தான் பார்த்திபனுக்கு ஹலோ சொன்னேன்.  பிறகு பாரதிராஜா வீட்டுக்குச் சென்ற போது மணி எட்டரை.  பனிரண்டு வரை பாரதிராஜாவும் பார்த்திபனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.   ”சிங்கத்தில் நல்ல சிங்கம் கெட்ட சிங்கம் என்றெல்லாம் உண்டா, சிங்கம் சிங்கம் தானே, நான் சிங்கம்” என்பது போன்ற ஏகப்பட்ட பஞ்ச் டயலாகோடு பேசினார் பாரதிராஜா.  மிகப் பெரிய … Read more