தீபாவளி
இப்போது நான் கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கிறேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்படியெல்லாம் குறிப்புகள் எழுதவே கூடாது. அத்தனை வேலை குவிந்து கிடக்கிறது. இருந்தாலும் இந்த விஷயம் மனதை நெருடிக் கொண்டிருந்ததால் எழுதத் துணிந்தேன். தீபாவளிக் கொண்டாட்டம் எனக்குப் பிடிக்காது. காரணம், மற்ற ஜீவராசிகள் வெடிச் சத்தத்தால் படும் தாங்கொணாத் துன்பம். நேற்று மாலையிலிருந்தே காகங்கள் பதற்றத்திலும் பீதியிலும் கதறிக் கொண்டிருக்கின்றன. வீட்டைச் சுற்றியிருக்கும் நானாவிதமான மரங்களிலும் நூற்றுக் கணக்கான காகங்கள் குடியிருக்கின்றன. அவற்றின் இடைவிடாத பயக் … Read more