சோமாலியா கொள்ளையர்களும் தமிழ் இலக்கியமும் – சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன் முகநூலில் எழுதியது: கப்பல் சோமாலியா கடல் எல்லையை தாண்டும் வரை பயணிகள் உஷாராக இருக்கும் படி சிப்பந்திகள் சொன்ன போது ஜெய்கிருஷ்ணன் சுப்ரமணியனுக்கு முதலில் சிரிப்பு தான் வந்தது. சென்னையில் தன் நண்பன் சந்தோஷ் வாங்கி கொடுத்த தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் கனமான புத்தகங்களை தவிர அவனிடம் சொல்லிக்கொள்ளும் படி எந்த உயர்தர வஸ்துவும் இல்லை. சோமாலிய கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்தால் கூட இப்புத்தகங்களை தூக்கி சுமக்க கஷ்டப்பட்டாவது தன்னை விட்டுவிடுவார்கள் என்று கற்பனை … Read more

என் கடன் பணி செய்து கிடப்பதே… (2)

சென்ற கட்டுரை பலரையும் பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்.  ஏகப்பட்ட கடிதங்கள்.  மற்றொரு விஷயத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன்.  இப்படியெல்லாம் அன்புடனும், கருணையுடனும், நட்புடனும், அகந்தையே இல்லாமலும் இருப்பதால் ‘கேணை’யாக இருக்க வேண்டும் என்பதில்லை.  வேலையில் கடுமையாகவே இருங்கள்.  இல்லாவிட்டால் ஏய்த்து விடுவார்கள்.  நான் அதில் சமரசமே செய்து கொள்வதில்லை.  வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வந்தால் எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்தே ஆக வேண்டும்.  யாருக்காவது காய்கறி நறுக்கத் தெரியாவிட்டால் அவர் வீட்டைச் சுத்தம் செய்யலாம். … Read more

என் கடன் பணி செய்து கிடப்பதே…

இந்தக் கட்டுரையை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது.  மறந்தால் நஷ்டம் எனக்கில்லை.  இந்தக் கட்டுரையை உங்கள் சந்ததிக்கும் சொன்னீர்களானால் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் வரும் தலைமுறைக்கும் அது நன்மை செய்யும்.  பொதுவாக என்னைப் பற்றிப் பொதுவெளியில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.  அது பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை.  ஞானியும் பிச்சைக்காரனும் பைத்தியக்காரனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருப்பார்கள்.  எனக்கு நான் யார் என்று தெரியும்.  உங்களுக்கு நான் எப்படித் தெரிகிறேன் என்பது குறித்து எனக்குக் … Read more

sultans of swing

Marginal Man நாவலை எடிட் செய்து கொண்டிருக்கிறேன்.  அதில் வரும் நாயகனும் நாயகியும் ஒவ்வொரு கலவியின் முடிவிலும் இசையில் மூழ்கித் திளைக்கிறார்கள்.  அதில் இந்தப் பாடலும் ஒன்று.  இதில் வரும் கிதார் ஒரு அற்புதமான கலவியின் நரம்பு அதிர்வுகளோடு தொடர்பு உடையது.  நான் சொல்வதை நம்ப முடியாவிட்டால் நீங்கள் அனுபவித்துப் பார்க்கலாம்.  அதிலும் பாடலின் முடிவில் கிதார் நரம்புகள் துடித்துக் கொண்டே இருப்பது ஆர்கஸத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே போவது போல இருக்கும்…