இலவசம்

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் ராமசாமி. ராமசாமியின் பாட்டனார் செட்டிநாடு பகுதியிலிருந்து பர்மாவுக்குப் பெட்டியடியாகப் போய் பெரும் பணம் சம்பாதித்து வட்டிக்கு விட்டு செல்வந்தரானார். பெட்டியடி என்றால் என்ன என்று புயலிலே ஒரு தோணியில் வரும். எல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம். ராமசாமி இந்தியாவையே பார்த்ததில்லை. ரங்கூனிலேயே இன்னொரு பணக்காரக் குடும்பத்தில் ராமசாமிக்குப் பெண் பார்த்துக் கட்டினார்கள். இரண்டாம் உலக யுத்தம் வந்த போது ராமசாமி தன் பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றிக்கொண்டு தன் மனைவி பாப்பாத்தியை அழைத்துக்கொண்டு … Read more

ஒரு குறுங்காவியம்

குமுதம் ஆசிரியராக இருந்து இளம் வயதில் இறந்து போன ப்ரியா கல்யாண ராமன் என் நெருங்கிய நண்பர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். இப்படி என் மேல் அன்பைப் பொழிந்த இன்னும் இரண்டு பேர் சார்வாகன், வாலி. என்ன துரதிர்ஷ்டம் என்றால் இந்த மூன்று பேருமே வெகு சீக்கிரத்தில் என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அதில் ப்ரியா கல்யாண ராமனின் பிரிவு சற்றும் எதிர்பாராதது. சார்வாகன் சொல்லி விட்டார், அடுத்த தீபாவளிக்கு நான் இருக்க மாட்டேன் என்று. … Read more

எரியும் உண்மை

பயணிகளின் கூட்டமற்றஒரு பருவம்வங்காள விரிகுடாவின்ரௌத்திரத்துக்கு மாறாகஆரவாரமற்ற அமைதியானஅரபிக்கடல் கோவாவின் அஞ்ஜுனா கடற்கரையில்நண்பர்கள் வட்டமாகமணலில் அமர்ந்திருக்கிறோம்கைகளில் மதுக்கோப்பைமணல் குறுகுறுப்பாக உரசஅது ஒரு வித்தியாசமான அனுபவம் ஆளாளுக்கு எது பிடிக்குமென்றுசொல்ல வேண்டுமென்றான் ஒருவன். இசை என்றார் ஒருவர்,பெண்கள் என்றார் மற்றொருவர்பயணம்வாசிப்புஅதற்கு மேல் ஏதுமில்லைஅற்புதங்கள் அருகிப்போனமனித வாழ்வு. சுற்று என் பக்கம் வந்தபோது,மது என்றேன்அது நாக்கில் கசந்துதொண்டையை எரிக்கையில்,ஆன்மா ஒரு கணம் குளிர்கிறது.வெறுமைக்கும் அபத்தத்துக்கும்குடியே பதில் –தற்காலிகமானாலும்,எரியும் உண்மையானாலும். இப்படிச் சொல்லி,என் கோப்பையை உயர்த்தியபோது,ஒருவன் கேட்டான்: “இதற்குப் பின்னால் ஒரு கதைஇருக்க … Read more

அகராதிகளின் சமீபத்திய பிற்சேர்க்கை

உறவு — பொய்களின் முகமூடி அண்டை வீட்டார் — கண்ணில் புழுதி தூவும் நிழல்கள் குழந்தைகள் — அறியாமையின் துளிர்கள் செல்லப் பிராணி — அபத்தத்தின் குறியீடு தெருப்பிராணிகள் — அவலத்தின் அடையாளம் பிச்சைக்காரர் — சமூகத்தின் சீழ் ஏழை — விதியின் பொம்மை உழைப்பாளி — எந்திரங்களின் அடிமை ஆசிரியர் — பிளாஸ்டிக் குவளைகளை உருவாக்குபவர் ரவுடி — கத்தியில் கட்டப்பட்ட மனிதத்தின் எச்சம் ஞானி — மௌனத்தின் புதிர் தீர்க்கதரிசி — கனவுகளின் விற்பனையாளன் … Read more

ஒரு காட்சி

பெங்களூர் ரயில் நிலையம்.வந்தே பாரத் ரயிலுக்காகநிற்கிறேன்.அப்போது ஒரு காட்சி: இளம்ஜோடி,நவீன உடைகளில். அவள் அழுது கொண்டே,முத்தங்களைப் பரிமாறி,ரயிலில் தனித்து ஏறுகிறாள்.ஏறிய பின்னும் கண்ணீர்அடங்கவில்லை என்பதைக்கண்டேன் சங்க காலப் பெண்டிருக்குத்தம் காதலனைப் பிரிந்துவளை கழன்று விழுந்தகதையெல்லாம் மனதில்தோன்றியது என் நண்பன் சொல்கிறான்,‘தற்கொலை செய்துகொள்ளலாம் போலிருக்கிறது,பைத்தியம் பிடித்துவிடும்போலிருக்கிறது’என்று. ’காதல் தோல்வியா?’ ’இல்லை. வெறும் பிரிவு,காதலி வெளியூரில்’ தாய்க்கு மகனையும் பேரர்களையும்,தந்தைக்கு மகளையும் பேரர்களையும்,காதலிக்குக் காதலனையும்காதலனுக்குக் காதலியையும்பிரிய முடியவில்லை. நண்பன் தற்கொலை என்றுபுலம்புகிறான். என் செல்லப் பிராணியைப்மரணத்திடம் தந்த போதுஎனக்கும் அப்படித்தான்இருந்தது. … Read more

இரண்டு திரைப்படங்கள்

நேற்று நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஈடி என்ற மலையாளப் படத்தைப் பார்க்க முயன்றேன். பத்து நிமிடம்கூட பார்க்க முடியவில்லை. சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. பத்தே நிமிடத்தில் (கக்கூஸில் ஒளிந்து கொள்ளும் காட்சி) ஓடி விட்டேன். இத்தனை சிறுபிள்ளைத்தனமாக தமிழ் சினிமாகூட இருப்பதில்லை. ப்ளூசட்டை மாறனின் பரிந்துரையில் இன்று டௌன்ரேஞ்ஜ் என்ற படம் பார்த்தேன். இப்படி ஒரு த்ரில்லரை இதுவரை பார்த்ததில்லை. மை நேம் இஸ் டெவில் அளவுக்கு இருந்தது. மை நேம் இஸ் டெவிலில் கதை இருந்தது. … Read more