சார்வாகன் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டம்

சார்வாகனின் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டம், டிசம்பர் 25 ஞாயிறு காலை 10 மணிக்கு மயிலாப்பூர் பரிசல் புத்தக நிலையத்தில் (PS உயர்நிலைப்பள்ளி எதிரில்) நடைபெறுகிறது. ‘குவிகம் இலக்கியவாசல்’ அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் சாரு நிவேதிதா, ஜி. குப்புசாமி, சார்வாகனின் சகோதரர் டாக்டர் ராஜன் ஹரிஹரன் ஆகியோர் பேசுகின்றனர். அனைவரும் வருக. அனுமதி இலவசம். – கிருபானந்தன், குவிகம் இலக்கியவாசல்

தஞ்சை ப்ரகாஷ் பற்றி லீனா மணிமேகலை…

தஞ்சை ப்ரகாஷ் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் சுமார் ஐம்பது பக்கங்கள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்.  அவர் எப்படி மற்ற தமிழ் எழுத்தாளர்கள் தொடாத இடங்களைத் தொட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களை விட அவர் மேலே இருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் நிறுவி இருக்கிறேன்.  அதை மறுக்க வேண்டுமென்றால் ஒருவர் தஞ்சை ப்ரகாஷின் அத்தனை நாவல்களையும் படித்து என் கட்டுரையை மறுத்தால் அதை நான் நல்ல விவாதம் என்று கருதுவேன்.  ஆனால் … Read more