இணையதளம் புது வடிவம்

நானும் சீனியும் பேசிக் கொண்டிருந்தபோது நம் இணைய தளத்துக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அதற்கான சுற்றுவழியைப் பார்த்து, திகைத்து, கடந்து சென்று விடுவார்கள் என்றார். நானும் ஆமாம் என்றேன். சரி, பண உதவி செய்ய நினைப்பவர்கள் சுலபமாகப் பணம் அனுப்ப என்ன செய்யலாம் என்று தொழில்நுட்ப நண்பரோடு கலந்து ஆலோசித்தார். அதற்கு ஒரு வேண்டுகோள் எழுதச் சொன்னார். நானும், பணம் வேண்டும் என்று எழுதி அதோடு இன்னும் ரெண்டு வரி சேர்த்து அனுப்பினேன். … Read more

Chat support (சிறுகதை)

அன்னபூர்ணிதான் என்னுடைய உணவுத் துறை.  எப்போதெல்லாம் வீட்டில் உணவு இல்லையோ அல்லது ஒரே உணவையே ஐந்தாவது முறையாகத் தின்ன நேர்கிறதோ அப்போது அன்னபூர்ணிக்கு மெஸேஜ் போட்டு விடுவேன்.  என்னது, ஐந்தாவது முறையா?  இதோ கணக்கு:  நேற்று மதியம் சாம்பார்.  அதையே இரவுக்கு.  காலை இட்லிக்குத் தொட்டுக் கொள்ள.  இன்று மதியமும்.  அப்படியானால் இன்று இரவு ஐந்தாவது முறைதானே?  பிடி அன்னபூர்ணியை.  இன்று இரவு அப்படி நேர்ந்தது.  சப்வேயிலிருந்து ஒரு சாண்ட்விச் வாங்கலாம் என்று நினைத்தேன்.  அவந்திகா நான் … Read more

நன்றி மனுஷ்ய புத்திரன்

என்னுடைய கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு நேற்று நள்ளிரவு மனுஷ்ய புத்திரன் எழுதிய முன்னுரை கிடைத்தது. நான் அதை அதிகாலையில் படித்தேன். ஹமீது அவர் பணி புரிந்து கொண்டிருந்த பதிப்பகத்திலிருந்து பிரிந்து வந்திருக்காவிட்டால் ஸீரோ டிகிரி பதிப்பகம் வரும் வரை நான் என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருப்பேன். முதல் முதலாக, துணிச்சலாக என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்தவர் ஹமீது. என்னுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் கூட முன் வர மறுத்த செயல் அது. … Read more

பிறந்த நாள் அன்று வந்த ஒரு கடிதம்…

தமிழில் எழுத்தாளனாக இருப்பது, இந்தியாவில் பெண்ணாகப் பிறப்பதைப் போல.  எவன் எப்போது கையைப் பிடித்து இழுப்பான், பலாத்காரம் பண்ணுவான் என்று தெரியாது.  எழுத்தாளனுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை.  வேறு விதமான ஒரு பிரச்சினை இது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும்தான்.  வேறு மொழி எழுத்தாளர்களுக்கு நான் சொல்வதே புரியாது.  நீங்கள் ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு விமானியும் வந்து நான் மருத்துவர் என்று சொல்ல மாட்டார்.  மருத்துவர் என்றால் மருத்துவர்தான்.  அதிலேயே சித்த மருத்துவர், ஆயுர்வேத … Read more

அ-காலம் : முன் வெளியீட்டுத் திட்டம்

ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்யும் போது இவர்களின் புருவம் கூட உயர்வது இல்லை . இந்தச் சிறுவர்களுக்கு இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை. … Read more

அருண்மொழி நங்கையின் நூல் வெளியீடு

நேற்று என் பிறந்த நாளை நான் கொண்டாடவில்லை. நாள் முழுவதும் ஔரங்கசீப்பின் அறுபத்தெட்டாவது அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த அத்தியாயத்தை எழுதி முடிக்க இரண்டு நாட்கள் ஆயின. இதோ இப்போதுதான் முடித்தேன். இப்போது 19.12.2021 காலை ஏழரை மணி. வாக்கிங் செல்லவில்லை. நேற்று மாலை மட்டும் வாசக சாலை நண்பர்கள் அளித்த பரிசை வாங்கிக் கொள்வதற்காக தக்கர் பாபா வித்யாலயம் சென்றேன். அதில் செல்வான இரண்டு மணி நேரத்தை இரவு கண் விழித்து சரி செய்தேன். என் … Read more