விஷமும் மருந்தும்…

இலக்கியம் என்பது விஷமும் மருந்துமாக செயல்படுகிறது.  ஹோமியோபதி மருந்து மாதிரி.  ஹோமியோபதி மருந்தின் மூலகங்களைப் பற்றிப் படித்தால் அவற்றில் பெரும்பாலானவை கொடிய விஷம் என்பதை அறிவீர்கள்.  கடுகளவு உண்டாலே மரணம்தான்.  ஆனால் அதைப் பல நூறு முறை நீர்த்துப் போகச் செய்துதான் நமக்கு மருந்தாகத் தருகிறார்கள்.  அதையும் நூறு மில்லி நீரில் பத்து சொட்டுதான் சேர்க்க வேண்டும்.  அப்படித்தான் இலக்கியமும்.  அது தெரியாமல் அதில் காலை விட்டால் அழிவுதான்.  எண்பதுகளில் என்னோடு ஒரு நண்பர் பழகினார். சராசரியாக … Read more

நண்பர்கள்

21 தினங்கள் 12 உருப்படிகளுக்காக மாடு மாதிரி வேலை செய்தாள் அவந்திகா. மகன், மருமகள், சிங்கம் சைஸில் இரண்டு கோல்டன் ரெட்ரீவர் நாய்கள், நாய் சைஸில் ஒரு பெர்ஷியன் பூனை, எங்கள் வீட்டுப் பூனைகள் ஐந்து – எல்லாம் சேர்த்து பன்னிரண்டு. சமயம் பார்த்து பணிப்பெண்ணும் நின்று விட்டதால் எல்லா வேலையும் அவந்திகா தலையில்.  உட்காரக் கூட முடியாமல் பன்னிரண்டு மணி நேர வேலை.  நானும் கூட மாட ஒத்தாசை செய்வேன்.  ஆனால் கடின வேலைகளை என்னால் … Read more

நெடுமுடி வேணு: மம்முட்டியின் அஞ்சலி

நான் அஞ்சலிக் குறிப்புகள் எதுவும் எழுதுவதில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். பல சமயங்களில் இறந்தவர் பற்றிய கசப்பான நினைவுகளே மனதில் கிளர்ந்து வரும். அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் என்னை அவமதித்தவர்களாக இருப்பார்கள். அல்லது, வேறு விதமான கசப்புணர்வு எழும். உதாரணமாக, ஊர் உலகமே கொண்டாடிய ஒரு நடிகர் இறந்த போது என் நண்பர்களும் ஊர் உலகமும் கண்ணீர்க் கடலில் ஆழ்ந்தது. எனக்கோ அவர் பற்றிய ஒரு கசப்பான நினைவு. ஒரு சினிமாவில் அவர் ஹிந்துக்களை அவதூறு செய்து … Read more

புதுமைப்பித்தன் : பேருரை: சாரு நிவேதிதா

கடந்த ஆண்டு நவம்பர் இறுதியிலும் டிசம்பர் ஆறாம் தேதியும் இரண்டு அமர்வுகளில் புதுமைப்பித்தன் பற்றி காலை ஆறு மணிக்கு உரையாற்றினேன். இந்த உரைகளைக் கேட்டால் இலக்கியம் பற்றிய உங்கள் புரிதல் மேம்படும் என்று நம்புகிறேன். என் இலக்கியப் பயணத்தில் புதுமைப்பித்தன் பற்றிய இந்த இரண்டு உரைகளும் மிக மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். முதல் உரையும் அதைத் தொடர்ந்த கேள்வி நேரமும் மூன்றரை மணி நேரம் நீண்டது. கேள்வி நேரத்தை விட்டு விடாதீர்கள். அதில்தான் சில சமயங்களில் உரையை … Read more

ஹெல்லோ…

சிலருக்கு இளைய ராஜாவைப் பார்த்தாலே உணர்ச்சி மிகுதியில் அழுகை வந்து விடும். சிலர் அவரைப் பற்றிப் பேசும்போதே அழுது விடுவார்கள். சிலர் அவரைப் பார்த்ததுமே காலில் விழுந்து விடுவார்கள். அவர்களின் ரத்த ஓட்டமாக இருப்பவர் இளைய ராஜா. எம்.எஸ். விஸ்வநாதனைப் பலருக்கும் பிடிக்கும். ஆனால் ராஜா அளவுக்கு யாரும் உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. நான் தமிழில் சிந்தித்து, தமிழில் பேசி, தமிழில் எழுதினாலும் அந்நியன். எனக்கு இந்த ராஜா மேட்டர் எல்லாம் புரிவதே இல்லை. அது எப்படி … Read more

சில கேள்விகளும் பதில்களும்…

சாரு, வணிக எழுத்தும் இலக்கியமும் படித்து மிகவும் வருத்தப்பட்டேன்.  ஏனென்றால், இதே பிரச்சினை பற்றி நீங்கள் குறைந்தது நூறு முறையாவது எழுதியிருப்பீர்கள்.  இன்னும் கூட இதை எழுதித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டம்தான்.   இந்தச் சிறிய கட்டுரையைப் படிப்பவர்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம்.  அதையெல்லாம் கேள்விகளாகத் தொகுத்திருக்கிறேன்.  இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் எங்களுக்கு நேரிலேயே பலமுறை விளக்கியிருக்கிறீர்கள்.  இருந்தாலும் பலருக்கு இந்தச் சந்தேகங்கள் எழலாம் என்பதால் கேட்கிறேன். 1.நன்றி என்ற குணம் என்னிடம் … Read more