வணிக எழுத்தும் இலக்கியமும்

பிஞ்ஜ் செயலி இருந்திராவிட்டால் நான் ராஜேஷ்குமாரைப் படித்திருக்க மாட்டேன்.  கைபேசியில் ஒரு குறியீட்டை அழுத்தினால் ராஜேஷ்குமாரைப் படித்து விட முடிகிறது என்ற அருகாமைதான் காரணம்.  இல்லாவிட்டால் கிண்டிலில் கூடத் தேடிப் போய் படித்திருக்க மாட்டேன்தான்.  இலக்கியத் துறையில் இன்னமும் ஜீவித்திருக்கக் கூடிய ஒருசில தீவிரவாதிகளில் நானும் ஒருவன் என்பதால் கைபேசியில் கிடைத்தாலும் படிக்கக் கூடிய ஆள் இல்லை நான்.  ஆனாலும் படித்ததற்குக் காரணம், வணிக எழுத்தில் அந்தப் பெயர் ஒரு சூப்பர் ஸ்டார் ரேஞ்ஜில் புழங்கி வருவதுதான்.  … Read more

வன யோனா பற்றி அபிலாஷ்

அராத்து ஒரு நல்ல பாலியல் உளவியல் கதை எழுதியிருக்கிறார் – “வன யோனா”. தி.ஜா, ராஜேந்திர சோழன் பாணி கதையை தன்னுடைய கலவையான மொழியில் சொல்லி இருக்கிறார். கதையின் முடிவு, resolution, திருப்பம் பொருத்தமாக அமையவில்லை. ஆனாலும் முக்கியமான கதை தான். இந்த விழுமியங்கள் நம்முடைய மொழியை இருட்டாக மொழுமொழுவென மாற்றி விடுகின்றன. இத்தகைய கதைகள் ஒரு வெளிச்சத்தை சட்டென கொண்டு வந்து தரையில் துலக்கி விட்டது போல பண்ணுகின்றன.இதை அப்படியே திருப்பி பெண்களின் தரப்பில் இருந்து … Read more

வன யோனா: சிறுகதை: அராத்து

“பொண்ணு பாக்கறப்ப தனியா பேச விடுவாங்க இல்ல, அப்பவே புடிச்சி கிஸ் பண்ணிடு மச்சி ” என்றான் சயன் . நாளைக் காலை மதுரைக்குச் சென்று பெண் பார்க்க இருக்கும் அவலாஞ்சி , இன்று நண்பன் சயனுடன் பியர் அடித்துக்கொண்டு இருக்கிறான். அவலாஞ்சியின்  அப்பா மின் துறையில் அவலாஞ்சியில் வேலை பார்த்தபோது இவன் பிறந்ததால் அவலாஞ்சி என்றே பெயர் வைத்து விட்டார். பையன் ஊட்டியில் தான் படித்தான். ஊட்டி கான்வெண்ட் என “ரேஞ்சை” ஏற்றிக்கொள்ளாதீர்கள். ஊட்டியில் அரசுப்பள்ளியில் … Read more

டன் டன் டன் டண்டனக்கர: சிறுகதை: அராத்து

அதிகாலை ஐந்து மணிக்கு போன் அடித்தால் பெரும்பாலும் எனக்குக் கேட்காது. அதிசயமாக எழுந்து மொபைலை எடுத்தேன். தங்கை. அப்பா இறந்து விட்டார் என்று தோன்றியது.போனை எடுத்தேன். “அப்பா…” “ஆமாண்ணா.“ அப்பாவுக்கு இப்போது சாகும் அளவுக்கு ஏதுமில்லை. அவர் சாவை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அதனால், தங்கையின் அழைப்பைப்  பார்த்ததுமே அப்பா இறந்து விட்டார் என்று எனக்குத் தோன்றியது ஆச்சர்யமானது ஆகிறது. எனக்கு இல்லை, உங்களுக்கு. எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆளுக்கு ஒரு ஊரில் இருந்தோம். அதனால் எப்படிச் செல்வது … Read more

அ. மார்க்ஸ் க்ளப் ஹவுஸில்…

அ. மார்க்ஸ் என் ஆசிரியர்களில் ஒருவர். நானும் பார்வையாளனாகக் கலந்து கொள்வேன். நீங்களும் கலந்து கொண்டால் மகிழ்வேன். 10.10.2021. Sunday 6.00 p.m. Poster Design: Raghunathan Murugesanhttps://www.clubhouse.com/…/zero…/joXllYEv/MwnEkAYO

எழுதுவதற்கு உகந்த நேரம் (சிறுகதை)

இந்த விஷயத்தைப் பற்றிப் பல எழுத்தாளர்களும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.  சிலருக்குக் காலை நேரம்.  பலருக்கு இரவு. அதோடு, எழுதும் நேரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களும் அவர்களின் பதிலில் கசிவதுண்டு. அதனால் இந்தக் கேள்வியைக் கேட்பவர்களும் மிகுந்த உற்சாகத்துடனே கேட்டு வைக்கிறார்கள்.  என்னிடமும் பல நண்பர்கள் இதைக் கேட்பதுண்டு.  முந்தாநாளும் ஒரு நண்பர் கேட்டார்.  அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.  எதுவுமே படிக்காதவன் கேள்வித் தாளைப் பார்த்து என்ன பதில் எழுதுவான்?  அப்படித்தான் … Read more