மதுவும் புத்தகமும்

மேற்கண்ட தலைப்பில் ஒரு ப்ளாக். அதில் எழுதுபவர் மதுநிகா சுரேஷ். மதுவின் மங்கியதோர் நிலவினிலே மிக வித்தியாசமான நிலவியலைக் கொண்டு இயங்குகிறது. அதுவே அதன் பலமாகவும் இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். மங்கியதொரு நிலவினிலே ….. – மதுவின் பக்கங்கள் (madhuvumputhagamum.blog)

பிடித்த பத்து பேர்

தனக்குப் பிடித்த பத்து பேர் என்று ஒரு பட்டியலைப் பல நண்பர்களும் முகநூலில் முகம் தெரியாத தோழிகளும் தோழர்களும் அடிக்கடி வெளியிடுவதைக் காண்பதுண்டு.  இதை ஆரம்பித்து வைத்தது க.நா.சு. என்று நினைக்கிறேன்.  வெகுஜன வெளியில் சுஜாதா.  சுஜாதாவின் பட்டியலில் எப்போதும் இடம் பிடித்தவர் ஒரு கவிஞர்.  இல்லை, நீங்கள் நினைப்பவர் இல்லை.  இவர் பெயர் “ப”வில் ஆரம்பிக்கும்.  அந்தப் பெயரை சுஜாதாவின் பட்டியலில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சுஜாதாவின் fetishதான் இப்படி வேறொரு ரூபம் எடுத்து வெளிவருகிறது … Read more