வீடு

இன்றும் வீடு தேடி மறைமலை நகர் வரை வந்தோம். கடைசியில் பார்த்தால் மறைமலை நகரிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரம் உள்ளே கோவிந்தாபுரம் என்ற குக்கிராமத்தில் இருந்தது வீடு. ஆனால் அங்கே வைஃபை கூட இல்லை என்பதால் இப்போது அம்பத்தூர் செல்கிறோம். வீடு பார்க்கத்தான். மைலாப்பூரில்தான் 1,70,000 ரூ மாத வாடகை கேட்கிறார்களே கொடூரர்கள்? வேறு என்ன செய்ய? பின்குறிப்பு: இந்தக் காரணத்தினால் இன்றைய கட்டுரை இன்று நள்ளிரவில்தான் பதிவேற்றம் செய்யப்படும்.

ஏன் தினமும் எழுதுகிறீர்கள்?

என் நண்பர் ஒருவர் என் வாட்ஸப்பில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். எழுதிய நேரம் இரவு 11.43. ”உங்களை நிரூபிக்க என்ன தேவை இருக்கிறது சாரு… ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஒரு ரெண்டு நாள் எழுதுங்கள், போஸ்ட் பண்ணாதீர்கள். வீட்டில் நீங்க பாட்டுக்கு இருங்கள். எழுதி எழுதி போஸ்ட் போடனும்னு எந்த அவசியமும் இல்லை. ஒரு பத்து நாள் அமைதியாக இருங்கள் .. எல்லாரும் தேடி வருவார்கள், இல்லயா ஒரு **## இல்லை.. சாரு தப்பாகச் சொல்லிருந்தால் மன்னிச்சிருங்க.. … Read more