தேவதேவன் நூல் வெளியீட்டு விழா – டிசம்பர் 30

முகநூலில் அராத்து எழுதியது: இலக்கிய விழாக்களுக்கு மஞ்சத்தண்ணி , காது குத்து போல தனித்தனியாக அழைப்பது உகந்ததல்ல. இந்த பொது அழைப்பையே அனைவரும் தனி அழைப்பாக ஏற்றுக்கொண்டு வந்து சேரவும். தேவதேவன் , சாரு நிவேதிதா மற்றும் அபிலாஷ் சந்திரனின் உரைகள் கவிதையைப் பற்றி புதியதொரு திறப்பை உங்களுக்குக் கொடுக்கும். நன்றியுரை என்ற சாக்கில் நானும் கொஞ்சம் கவிதையை வறுக்கலாம் என்றுள்ளேன். எந்த பல்கலைகழகத்திலும் கிடைக்காதது இது. தனி மனிதர்கள்தான் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது. நம் வாசகர் … Read more

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (4)

விதவிதமாகத்தான் கொண்டாடுகிறார்கள். நேற்று ஒரு வாசகி எழுதியிருந்தார். ”புத்தக விழாவில் உங்களை சந்தித்தால் எலும்பு நொறுங்கக் கட்டி அணைப்பேன்.” உண்மையில் ஒரு ராக்ஸ்டாருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பாக்கியம் இது. அந்த வன்முறைச் சம்பவத்துக்காகவே புத்தக விழாவை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். டிசம்பர் 18 என் பிறந்த நாள் இல்லையா? மைலாப்பூர் பூராவும் என் புகைப்படத்தோடு சுவரொட்டிகள் மிளிர்ந்தன. யார் காரியம்? கீழ்க்கண்ட கடிதத்தைக் காணுங்கள். வணக்கம் ஐயா தங்களின் பிறந்தநாளை முன்னிட்டு நிலக்கோட்டை உள்ள மாணிக்கம் அண்ட் … Read more

எழுத்தாளனைக் கொண்டாடுதல் (3)

சென்ற ஆண்டு சென்னை அண்ணா நூலகத்தில் என் உரையைக் கேட்பதற்காக சிவசங்கர் என்ற மாணவர் மதுரையிலிருந்து கிளம்பி வந்தார். இப்போது அவரிடமுருந்து இப்படி ஒரு கடிதம்: ஜனவரி மாதத்தில் கேரளாவில் நடைபெற இருக்கும் ‘இலக்கியத் திருவிழாவில்’ பங்கேற்பதற்கு சிறு சேமிப்பையும், சின்னதான கடனும் வாங்கி பதிவு செய்துகொண்டேன். உங்களுக்கு நேரம் கிடைத்தால் நாம் அங்கு சந்திப்போம், சாரு. ஜனவரி 11 முதல் 14 வரை கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் நான் பதின்மூன்றாம் தேதி … Read more

நீரழிவு நோய் பற்றி…

நீரழிவு நோய் குறித்தும் அதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சை பற்றியும் இன்று என் நண்பர் டாக்டர் பாஸ்கரன் ஹிந்து தமிழில் எழுதியிருக்கிறார். படித்துப் பயனடையுங்கள்.

நேற்று நடந்த ஒரு அதிசயம்…

நேற்று நடந்த அதிசயத்துக்குக் காரணம் வினித் தான்.  அவர் இல்லாதிருந்தால் அந்த அதிசயம் என் வாழ்வில் நடந்திராது.  விரிவாகச் சொல்ல வேண்டும்.  ஏற்கனவே நான் சென்னையில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தும் ஒரே ஒரு படத்துக்குத்தான் போக முடிந்தது, புத்தகப் பிழை திருத்தம் வேலையின் காரணமாக அதற்கு மேல் திரைப்பட விழாவுக்குப் போக முடியாத வருத்த்த்தில் இருந்தேன்.  அந்த நேரத்தில் மியூசிக் அகாடமியில் நடக்கும் அபிஷேக் ரகுராம் கச்சேரிக்கு வருகிறீர்களா என்று கேட்டார் வினித்.  … Read more

பெட்டியோ – என்.எஃப்.டி. & அச்சுப் புத்தகம்: ஒரு விளக்கம்

பெட்டியோ நாவல் அச்சுப் புத்தகமாக வராது, என்.எஃப்.டி.யில் மட்டுமே வெளிவரும் என்று முன்பு சொல்லியிருந்தேன். இப்போது அச்சுப் புத்தகமாக வருகிறது. இது என்னுடைய நம்பகத்தன்மையைக் கெடுக்கும் என்று காயத்ரியும் சீனியும் தெரிவித்தார்கள். அச்சுப் புத்தகமாக வர வேண்டாம் என்பது இருவரின் கருத்து. எப்போதும் சீனி சொல்வதையே கேட்கும் நான் சில சமயங்களில் அவர் பேச்சையும் மற்றும் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். அம்மாதிரி ஒரு நிலை இப்போது. நான் என்.எஃப்.டி.யில் நூறு பேர் வாங்குவார்கள் என்று நினைத்தேன். … Read more