பத்து கேள்விகள் : அழகிய சிங்கர் எடுத்த நேர்காணல்

நேற்றைய முன் தினம் அழகிய சிங்கரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  அப்போது அவர் என்னிடம் பத்து கேள்விகள் கேட்டு என் பதிலை விடியோ எடுத்தார்.  அதன் இணைப்பு கீழே.  இதே போல் அசோகமித்திரனிடம் பத்து கேள்விகள் கேட்டு விடியோ எடுத்திருக்கிறார்.  அசோகமித்திரனை தி.நகரில் அவரது புதல்வர் இல்லத்தில் சந்தித்தேன்.  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அது ஒரு பெரிய கதை.  பிறகு சொல்கிறேன்.  இப்போதைக்கு நேர்காணல்.

படித்ததில் பிடித்தது…

தி இந்துவில் வெளிவரும் நடுப்பக்கக் கட்டுரைகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.  புனைகதைகள் தவிர தமிழில் நான் படிக்கும் கனமான விஷயம் இந்து கட்டுரைகள்தான்.  மற்றபடி வணிக நோக்குடன் நடத்தப்படும் வார இதழ்களைப் படிக்க நேரம் இல்லை.   இரண்டு தினங்கள் முன்பு இந்துவில் வந்த அரவிந்தனின் கட்டுரை முக்கியமானது.  இன்றைய தினம் வெளிவந்துள்ள சமஸின் கட்டுரை மிக மிக முக்கியமானது.  நான் மாடுகளை தெய்வமாகத் தொழுபவன்.  ஒவ்வொரு பசுவும் எனக்கு தெய்வம்.  ஆனால் நீங்கள் மாட்டுக்கறி சாப்பிடும் … Read more