மனிதாபிமானிகளின் அக்குறும்பு…

அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு, நல்லவர்களை விட எனக்குத் திறமைசாலிகளே தேவையாக இருக்கிறார்கள் என்று.   நல்லவர்கள் என்னைப் போலவே பேக்குகளாக இருக்கிறார்கள். அதேபோல் இன்னொரு டார்ச்சர் பேர்வழிகள் மனிதாபிமானிகள்.  அடிக்கடி அவர்களை நான் நண்பர்களாக அடையும் பேறு பெறுகிறேன்.  அப்படிப்பட்ட மனிதாபிமானிகள் போனில் அழைத்தால் எடுக்காமல் போன் அழைப்பை வெட்டி விட்டு அவர்களே அழைப்பார்கள்.  காரணம், என்னுடைய செலவைக் கட்டுப்படுத்துகிறார்களாம்.  எப்போது பார்த்தாலும் நான் ஏழை, பணத்துக்கு சிரமப்படுகின்றவன் என்றேவா ஒருத்தரின் மனதில் என்னைப் பற்றிய … Read more

இச்சைகளின் இருள்வெளி – ஒரு மதிப்புரை

இச்சைகளின் இருள்வெளி நூலுக்கு டாக்டர் ஸ்ரீராம் மதிப்புரை எழுதியுள்ளார். *** நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும். மேலும் படிக்க: http://sriramintamil.blogspot.in/2016/03/blog-post_24.html

Charu Nivedita – An Installation by N.Srinivasan

புத்தக வெளியீட்டு விழா அரங்கில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் installation பற்றி டாக்டர் ஸ்ரீராம் எழுதியுள்ளார். “சாரு, வலது கீழ் மூலையில் ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?” என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், “எடுக்க சொல்லிருங்க,” என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, “ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; … Read more

கல்கி நேர்காணல்

இந்த வார கல்கியில் என் நேர்காணல் வந்துள்ளது.  ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் பேட்டி மாதிரி இல்லாமல் ஒரு எழுத்தாளனின் பேட்டி போல் வந்துள்ளது.  அமிர்தம் சூர்யாவே காரணம்.   அவருக்கு என் நன்றி.