பிறைகளுக்கான நாளில் உனக்கு ஒரு கடிதம்… கஸல் காஸ்

பிறைகளுக்கான நாளில் உனக்கு ஒரு செய்தி அனுப்பவா.. முதலில் ஆறும் அருவியும் கொட்டும் உன் ஊரின் சௌகரியங்கள் எப்படியென்று சொல்.. இந்த உலகம் தன்பாட்டுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.. உன் சட்டையை மடித்துவிட்டு மீனுக்கு மஞ்சள்தடவி ஊற வைக்கும் நேரத்தில் தேவகுமாரரர்கள் அவதரிக்கிறார்கள்.. மரித்து போதல் பற்றி நீ சடைத்துக்கொண்டு எழுதியிருந்தாய்..மக்களுக்கு மரணம் என்றால் பயம்..உனக்கு அது சாகசம்..உன் அச்சில் அவர்களை பொருத்தாதே..மின்தடை நாட்களில் மெழுகுதிரிகளை ஏற்றும் உலகில் நின்றுக்கொண்டு இருளை வர்ணிக்காதே.. மரித்து போதல் என்பது வளம்.உனக்கு … Read more

பிரார்த்தனை – லக்ஷ்மி சரவணகுமார்

பிரார்த்தனைகளின் மீது நம்பிக்கை இருக்கிறாதென்கிற கேள்வி சமயங்களில் பிறரிடம் இருந்தும் என்னிடமிருந்தே எனக்கும் கேட்கப்படும் பொழுதெல்லாம் எது பிரார்த்தனை என்னும் குழப்பமான எண்ணங்களும் அதோடு வந்துவிடுகிறது. வாழ்வின் பிரதான தேவைகளைத் தேடி கண்டடைய நிகழும் பயணத்தில் நாம் இழந்தவைகளுக்கு ஆறுதல் சொல்வதற்கான ஒரு வழியாய் நினைத்துக் கொள்ளலாமா? அல்லது தனது எதிர்கால கனவுகள் ஒவ்வொரு நாளும் புதிதொன்றாய் மாறிக் கொண்டே இருப்பதும் அதை துரத்தி செல்வதற்கான நம்பிக்கை இழக்கும் தருணங்களில் எல்லாம் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓட … Read more