குழப்பத்திற்கு மன்னிக்கவும்…

இன்றுதான் … இப்போதுதான் எனக்கு சு. வெங்கடேசன் என்றும் சு. வேணுகோபால் என்றும் இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்றே தெரியும்.  குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

நவீன்… நீ என்னை மிகப் பெரிய சிக்கலில் மாட்டி விட்டு விட்டாய்.  உன்னை மன்னிக்கவே மாட்டேன்…  இது சம்பந்தமாக வந்த கடிதத்தை இங்கே தருகிறேன்… இனிமேல் அந்தக் கட்டுரையை மாற்ற முடியாது.  பெயர்களை ரத்து செய்து விட்டு நான் சொல்ல வந்ததை மட்டும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்…

அன்புள்ள சாரு

ஜெயமோகனின் பகடிக் கட்டுரையை எதிர்த்து போராட்டம் நடத்தியது சு. வெங்கடேசன் (காவல் கோட்டம் எழுதியவர்). ஆனால் அந்தக் கட்டுரையில் “சாரு சு வேணுகோபாலை படித்ததில்லை” என்றே  அம்மலேசிய எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார். இருவரையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். சு வேணுகோபால் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை…’

குரு

 

Comments are closed.