தேவதையும் ரத்தக் காட்டேரியும்

எனக்கொரு வாட்ஸப் சேதி வந்தது ஹாய், நான்தான் உன் பக்கத்து வீட்டுப் பஞ்சவர்ணக் கிளி எப்படி நம்புவது உடனே வந்தது செல்ஃபீ ஒரு சோபாவில் அமர்ந்திருந்தது கிளி என் எஜமானர் வாங்கிக் கொடுத்தார் என்றது அதற்குப் பிறகு வந்தன ஏராளமான வாட்ஸப் சேதிகள் ஒருநாள் குட்மார்னிங் வந்தபோது இனிமேல் இப்படி அனுப்பாதேயென பதில் அனுப்பினேன் இளைய கிளி என்பதால் சர்வ சாதாரணமாகப் பறந்தன சிகப்பு நிற இதயக் குறிகள் வீட்டில் பார்த்தால் ரகளையாகுமே என்று இனிமேல் வேண்டாம் … Read more

சொல்

எறும்பின் காலம் வேறு மனிதனின் காலம் வேறு பட்சிகளின், நட்சத்திரங்களின் காலம் வேறு.இது யார் சொன்னது எனக் கேட்டது பக்கத்து வீட்டுப் பலவர்ணக் கிளி. காலத்தைப் பேசியவரின் பேர் சொன்னேன்அதற்கும் எனக்குமிடையே சொற்களின் வழியே ஒரு சிநேகிதம் மலர்ந்தது வளர்ந்தது மலர்வதற்கு நட்பு என்ன மலரா வளர அதுவொரு கொடியா என்றது பஞ்சவர்ணம் பேரை மாற்றாதே அடையாளமிழந்து என்னால் வாழ முடியாது என்று கத்தியது கிளி  முன்பு வாழ்ந்த பேருக்கு இது பரவாயில்லை எனத் தலையசைத்தது.ஒருநாள் எங்கள் தத்துவ உரையாடலின் … Read more

இன்றைய வெனிஸ் மாநாடு

இன்று வெனிஸில் நடக்க இருக்கும் அறிவியல் – கலை மாநாடு பற்றி நேற்று எழுதியிருந்தேன். இந்தியாவிலிருந்து இரண்டு நரம்பியல் நிபுணர்கள் அங்கே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸில் பணி புரிபவர்கள். இலக்கியத்தில் நான். போயிருக்கலாமோ என்று நேற்றிலிருந்து யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. எனக்கு ஸல்மான் ருஷ்டி மீது பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் அலெக்ஸாந்தர் க்லூஜை சந்தித்து அளவளாவியிருக்கலாம். பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன். ஔரங்ஸேப் முக்கியம். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். முடிக்க வேண்டும். … Read more

22 ஏப்ரல் வெனிஸில் என் சிறுகதை வாசிப்பு

Fondazione Prada அமைப்பின் ஓவிய – சிற்ப – இலக்கிய விழா நாளை மாலை வெனிஸில் தொடங்குகிறது.  எனக்கு அழைப்பு இருந்தும் ஔரங்ஸேபை முடிக்க வேண்டியிருப்பதால் நான் செல்லவில்லை.  உலகம் முழுவதிலும் இருந்து 32 எழுத்தாளர்கள் இந்த விழாவுக்காகவே எழுதிய புதிய கதைகளை நாளை ஜார்ஜ் கைடால் வாசிக்கிறார்.  இதில் ஹானான் அல்-ஷேக்கின் ஒரு கதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  அலெக்ஸாந்தர் க்லூஜ் மிக முக்கியமான எழுத்தாளராக உலகம் முழுதும் அறியப்பட்டவர்.  கண்காட்சி நவம்பர் வரை இருப்பதால் பிறகு … Read more

இன்னொரு கவிதை: மகிழ்ச்சி

நீ நினைப்பதுபோல் நான் மகிழ்ச்சியாக இல்லை என்றாள் மகிழ்ச்சி என்றேன் பிறிதொரு நாள் இவ்வுலகில் நீதானென் ஒரே மகிழ்ச்சி உன்னை ஒருக்கணமும் பிரிந்திருக்க சம்மதியேன் என்றாள் மகிழ்ச்சி என்றேன் இப்போது மகிழ்ச்சி குறித்து நானும் முதல்முறையாக யோசிக்க ஆரம்பித் திருக்கிறேன்

இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மீனாட்சி எனும் சாதகப் பட்சி

1வருகை________கருப்புத் தோல் பரட்டைத் தலை அழுக்கு வேட்டிவியர்த்த உடல்காலில் செருப்பில்லைஒருகையில் ஜோசியக் கிளிக்கூண்டுஇன்னொரு கையில்இரண்டாக மடித்த பிளாஸ்டிக் விரிப்பு“ஐயாவுக்குத் தான் ஜோசியம் பார்க்கணும்” என்றுஎன்னைக் காட்டிச் சொன்னார் நண்பர்தலைக்கு அம்பது ரூபாய் எனவிலை வைப்பது போல்கட்டணத்தைச் சொன்னவாறே“தாராளமாகப் பார்க்கலாம்” என்றபடிவிரிப்பை விரித்து  அமர்ந்தான் கிளி ஜோசியன் (2)வாக்கு______“அம்மா மீனாட்சி, ஐயாவுக்கு ஒரு சீட்டு எடு”கதவு திறந்து வெளியே வந்துகட்டிலிருந்து ஒரு சீட்டெடுத்துக் கொடுத்தாள் மீனாட்சிஎன்ன படமோ எது பார்த்தானோ“திருஷ்டி இருக்கிறது ஐயா, நிறைய திருஷ்டி இருக்கிறதுஅந்த திருஷ்டியை … Read more