கண்கள் (சிறுகதை)

நான் சக்தி உபாசகன்.  ஆண் தெய்வங்களை வழிபடுவதில்லை.  ஆனாலும் ஸ்ரீ ஜெயந்தியை படு விமரிசையாகக் கொண்டாடுவேன்.  சீடை முறுக்குக்காக.  இந்த ஆண்டு வெறும் அவல் பாயாசத்தோடு முடிந்தது கொண்டாட்டம்.  அநியாயம்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே போயிருக்க வேண்டும். (இந்த வார்த்தையில் ஒரு பிரச்சினை இருக்கிறது.  பிறகு பார்ப்போம்.)  கொரோனா காரணமாகத் தள்ளிப் போட்டேன்.  ஆனால் இனியும் தள்ளிப் போட முடியாது என்று தோன்றியபோது சென்று விட்டேன்.  இருந்தாலும் தேதிகளைப் பார்த்து ஸ்ரீஜெயந்தி வருகிறது என்று தெரிந்திருந்தால் இன்னும் … Read more

இனிய நினைவுகள்…

என் வயது 68.  அதனால் கடவுளைத் தவிர வேறு எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை, தயங்க வேண்டியதில்லை என்ற மனோபாவம் வந்துள்ளது.  முன்பேயும் இப்படித்தான்.  இப்போது அது கொஞ்சம் வலுப்பட்டிருக்கிறது.  பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  இந்தியா டுடே என் நண்பரும் என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவருமான வாஸந்தி ஆசிரியர் பதவியிலிருந்து விலகி மற்றொருவர் அதன் ஆசிரியராக ஆகியிருந்த நேரம்.  புதிய பொறுப்பு அவருக்கு.  உதவி ஆசிரியராக இருந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்தவர்.  இப்போது தினமலரில் பணியில் … Read more

தமிழ்த் தாயின் புன்னகை

ஒரு இளைஞனின் கடிதம் வந்தது.  பதினாறு வயதிலிருந்து உங்களைப் படிக்கிறேன்.  இப்போது வயது இருபத்து மூன்று.  பதின்பருவத்தில் உங்களுக்கு நீண்டதொரு கடிதம் எழுதினேன்.  ஆனால் அனுப்பவில்லை.  அனுப்பினால் திட்டுவீர்கள் என்று கேள்விப்பட்டு பயந்து அனுப்பாமல் இருந்து விட்டேன்.  இப்படி நீண்டது அந்த ஆங்கிலக் கடிதம்.  இதுதான் சாரம். ரொம்பவும் மனதைத் தொட்டதால் “ஒருநாள் ப்ரூ ரூம் பக்கம் வாருங்களேன், சாப்பிடுவோம்” என்று பதில் எழுதினேன்.  உங்களோடு சாப்பிட்டால் செத்துடுவேன் சாரு. ஐயோ, ஏன், நான் ஒன்றும் விஷமெல்லாம் … Read more

தமிழ்த் தாயின் சாபம்…

எஸ்.ரா.வின் பேட்டி ஒன்றைப் பற்றி பலரும் சிலாகித்து எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  முகநூலிலும் பார்த்தேன்.  எல்லோருமே அதில் கொண்டாடும் குறிப்பிட்ட விஷயம், அதில் உள்ள நேர்மறையான எண்ண அதிர்வுகள்.  உதாரணமாக, எஸ்.ரா.வுக்கு வாசகர் ஒருவரின் போஸ்ட் கார்ட் போகிறது.  என்னடா எழுதுறே, உன் கை காலை வாங்குவேன்.  அந்தக் கார்டில் வாசகரின் விலாசமும் இருப்பதால் அவர் வீட்டுக்கே போகிறார் எஸ்.ரா.  அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.  அந்த வாசகர் எஸ்.ரா.வுக்குத் தேநீர் … Read more

ஓர் இனிய சந்திப்பு

வாசகர் வட்ட சந்திப்பு நடத்தி இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன.  சீனியின் புத்தக வெளியீட்டு விழாவில் கூடினால் அது வா.வ. சந்திப்பு.  அப்படி இறுதியாக உத்தண்டியில் கூடினோம்.  கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாகக் கூடவில்லை.  கொரோனா போனால் மாமல்லபுரத்தில் சந்திக்கலாம்.  ஆனால் அதற்கு முன்னதாக சில திட்டங்களை வகுக்க வேண்டும்.  அதற்கு முதல் அடியாக சீனி என் பேச்சைக் கேட்க வேண்டும்.  லௌகீகமாக நான் ஒரு பூஜ்யம் என்பதால் சீனியும் சரி, காயத்ரியும் சரி, நான் என்ன … Read more