ஆப் கா காம் ஹே, பண்டிட் ஜி!

மிகப் பெரிய படிப்பாளியும், ஆய்வாளரும், கவிஞருமாகிய என் நண்பர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.  இன்னொரு அவதூறும் செய்திருக்கிறார்.  அதாவது, தருணின் தயவு இருந்தால்தான் என் நாவலை ஆங்கிலத்தில் வெளியிட முடியும் என்பதால்தான் தருணை ஆதரித்து எழுதுகிறேனாம்.  படித்தவன் கெட்டவனாக இருந்தால் இப்படித்தான் யோசிக்கத் தோன்றும்.  ஏன்யா, என் புத்தகம் ஆங்கிலத்தில் வருவதற்காக இவ்வளவு பெரிய தியாகமா செய்வேன்?  தருணின் இரண்டு மகள்களும், மனைவியும், தருணின் வயதான அம்மாவும் இரண்டு மாதமாக கோவாவில் தங்கி, செவ்வாய்க் கிழமையும் வெள்ளிக்கிழமையும் கால் … Read more

மரமும் மனிதனும்…. எல்லே ராம்

மரங்களையும் பிராணிகளையும் நேசிப்பவர்களை நான் நேசிக்கிறேன்.  மனிதர்களோடு பழகுவதை விட மரங்களோடும் பிராணிகளோடும் பழகுவது மனதுக்கு இனிமை தருவதாக உள்ளது.  அதனாலேயே பாலு மகேந்திராவை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  அதனாலேயே தருணை எனக்கு அதிகம் பிடிக்கிறது.  மரங்களை நேசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவன் தருண்.  அவனுடைய ஆல்கெமி ஆஃப் டிஸையரைப் படித்தால் நீங்களும் மரங்களை நேசிக்கத் துவங்குவீர்கள்.  எல்லே ராம் என்றும், லாஸ் ஏஞ்ஜல்ஸ் ராம் என்றும் அழைக்கப்படும் என் அன்புக்குரிய ராம் முகநூலில் எழுதியுள்ள இந்தப் … Read more

சுவாரசியம்

என் வாழ்க்கையை இது போன்ற கடிதங்கள்தான் மேலும் சுவாரசியமாக்குகின்றன.  நீங்களும் படித்து இன்புறுங்கள்.   சல்மான் ருஷ்டி, வி.எஸ். நைப்பால் போன்றவர்களை விடவும் மாபெரும் இலக்கிய சாதனை புரிந்தவர் தருண் தேஜ்பால்.  தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகிய இருவருக்கும் நிகரானவர்.  அவரை இந்தியர்கள் ரேப்பிஸ்ட் என அடையாளம் காண்கிறார்கள்.  எனவே நான் கிசுகிசு எழுத்தாளன் எனவும், இன்னும் பிறவாகவும் அடையாளம் காணப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.  படித்தவனே படிக்காத அறிவிலியை விட மூடனாக இருக்கிறான் என்பதற்கு இதெல்லாம் சான்று. எப்படி … Read more