.பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன் சாரு…

என்னுடைய வாசகர்களில் 90 சதவிகிதம் பேர் மாணவர்கள் தான்.  சில தினங்கள் முன்பு கணேஷ் அன்புவுடன் பெலிட்டா உணவகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தந்தையின் வயது 58 என்று சொன்னார்.  ஓ, என் வயதை விட மூன்று வயது சின்னவரின் மகன் என் நண்பர்.  என்னை இவர்கள் அனைவரும் சாரு என்று பெயர் சொல்லியே அழைக்கின்றனர்.  இதைப் பற்றியெல்லாமா பீற்றிக் கொண்டிருப்பது, செய்வதற்கு எத்தனையோ உருப்படியான வேலைகள் இருக்கின்றன என்று நினைப்பேன்.  இப்போதுதான் இதையெல்லாம் … Read more

கோவை சந்திப்பு

வரும் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை கோவையில் இருப்பேன். ஜனவரி 5-ஆம் தேதி எக்ஸைல் வெளியீட்டு விழா பற்றி நண்பர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். என்னுடைய பழைய ஃபோன் வேலை செய்யவில்லை. எனவே அந்த எண்கள் எதுவும் என்னிடம் இல்லை. எனவே கோவை நண்பர்கள் என்னை அவர்களாகத்  தொடர்பு கொண்டால் தான் உண்டு. charu.nivedita.india@gmail.com

அப்படியானால் நாங்கள் நடத்துவது எழவு விழாவா?

இன்று காலையில் ஜெயமோகன் ப்ளாகில் ஜடாயு என்பவர் ஸ்வராஜ்யா பத்திரிகையில் எழுதியிருந்ததை எடுத்துப் போட்டிருப்பதைப் படித்ததும் என் சாவுக்கு தமிழ் இலக்கிய உலகில் நிலவும் பொய்யும் பித்தலாட்டமும்தான் காரணம் என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதி வைத்து விட்டு தூக்கில் தொங்கி விடலாம் என்று நினைத்தேன்.  ஆனாலும் மரணத்தையும் தற்கொலை உணர்வையும் மன உளைச்சலையும் சந்தோஷத்தையும் மற்ற எல்லா எழவையும் கூட எழுத்தின் மூலமாக மட்டுமே நான் கடந்து கொண்டிருப்பதால் அந்தத் தற்கொலை முடிவை ரத்து செய்து … Read more