புதிய எக்ஸைலின் ஒரு அத்தியாயம் பற்றி நாகூர் ரூமி

புதிய எக்ஸைலின் ஒரு அத்தியாயத்தை நாகூர் ரூமிக்கு அனுப்பி வைத்திருந்தேன்.  அதற்கு அவர் எழுதிய கடிதம்: அன்புள்ள அண்ணன், படித்துவிட்டேன். என்னளவில் இதில் மாற்றங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. 1970களுக்குக்  கொண்டுபோய் விட்டுவிடுகிறது உங்களது எழுத்து உண்மையிலேயே. இது அந்த அத்தியாயத்தின் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சில இடங்களில் என் கருத்தை அடைப்புக்குறிக்குள் கொடுத்துள்ளேன். அவை சேர்ப்பதற்கு அல்ல. நீங்கள் பார்ப்பதற்கு. கட்டி ’படங்க்’ என்பது ’பதங்க்’ என்று இருக்கவேண்டும் (லதா பாடும் பாட்டைக் கேட்டால் உங்களுக்கே … Read more

புதிய எக்ஸைல் : முதல் பிரதி

1978-இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது பாரதி மணியோடு அவ்வளவு பழக்கம் இல்லை.  அங்கே வெங்கட் சாமிநாதனோடு சேர்ந்து விட்டால் மற்றவர்களோடு நட்பு கொள்வது சாத்தியம் இல்லை.  சாம் ஒன்றும் சொல்ல மாட்டார்.  ஆனால் நமக்கே அப்படித் தோன்றி விடும்.  அது மாதிரி ஒரு ‘பயங்கரவாத’ குழு அது.  டாக்டர் ரவீந்திரன் மட்டும் எல்லோருடனும் நட்பாகப் பழகுவார்.  இந்தப் பிரச்சினையினாலேயே க.நா.சு., ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களோடு அங்கே பழக முடியாமல் போய் விட்டது.  இலக்கியச் … Read more

கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ளீஸ்…

அன்பிற்குரிய சாரு,  ஊரின் மிக அழகான பெண் படித்துக் கொண்டிருக்கிறேன். சு. கிருஷ்ணசாமி, ஜி. குப்புசாமி வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள். மிக நேர்த்தியாக, கதைகளின் மோனத்தை, தனிமையை கலைக்காமல் அப்படியே கடத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி சாரு. Thanks & Regards, Bala K அன்புக்குரிய பாலா, 30 ஆண்டுகளுக்கு முன்னால் என்று நினைக்கிறேன்; ஓரிரு ஆண்டுகள் பிந்தியோ முந்தியோ இருக்கலாம்.  அப்போது நான் தில்லியில் இருந்தேன்.  அப்போது பிரம்மராஜன் என்ற கவிஞர் ஊட்டியிலிருந்து மீட்சி என்ற பத்திரிகையை … Read more