5. இசை பற்றிய சில குறிப்புகள்

தமிழில் இசை பற்றி எழுதுபவர்களில் லலிதா ராமின் கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  அடுத்து, சேதுபதி அருணாசலம்.  என்னுடைய பழுப்பு நிறப் பக்கங்களில் தி. ஜானகிராமன் பற்றிய நீண்ட கட்டுரையில் சேதுபதி அருணாசலத்தின் தி.ஜானகிராமன் பற்றிய கட்டுரைகளிலிருந்து பல மேற்கோள்களை எடுத்திருக்கிறேன்.  சேது அருணாசலத்தின் கட்டுரைகளை என் source-ஆக அதில் குறிப்பிட்டும் இருக்கிறேன். இன்று காலையில் பாலாசுப்ரமணியன், இசை குறித்து தி.ஜா. எழுதியவற்றை சேதுபதி அருணாசலம் தொகுத்து எழுதியிருக்கும் கட்டுரையின் (தி. ஜானகிராமனின் இசையுலகம்) இணைப்பை … Read more

4. இசை பற்றிய சில குறிப்புகள்

ஒருவர் பிறந்ததிலிருந்தே கண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்.  ஒருவர் எழுதப் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே இலக்கியப் பிரதி எதையுமே தொட்டதில்லை.  ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு உலக சினிமாவைக் கூடப் பார்த்ததில்லை.  தெரிந்ததெல்லாம் விஜய், அஜித், தனுஷ், சூர்யா.  ஒருவர் பிறந்ததிலிருந்தே நல்ல இசையைக் கேட்டதில்லை.  இவர்களுக்கெல்லாம் நீங்கள் காண்பதன் அற்புதங்களையும், இலக்கியத்தின், சினிமாவின், இசையின் சுவைகளையும் மேன்மைகளையும் எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும்? விவேகானந்தரின் வாழ்வில் நடந்த விஷயத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அவர் ஒரு அக்நாஸ்டிக்.  … Read more

Pithy thoughts – 12

ஒரு கள ஆய்வுக்காகக் கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றிருந்தபோது பாதியெரிந்த பிரேதத்தைப் புசித்துக் கொண்டிருந்த மனித சாயலிலிருந்த ஒரு உருவத்தைப் பார்த்து நீ கடவுளா மனிதனா எனக் கேட்டேன் சைத்தான் என்றது உருவம் எந்த ஊர் என்றால் அந்தரவாசி என்றது அதோடு விடாமல் என்னோடு கூடவே வந்தது வாயெல்லாம் வழிந்த குருதியைக் கழுவிக் கொள் எனச் சொல்லி என் பையிலிருந்த வாட்டர் பாட்டிலைக் கொடுத்தேன் சுத்தப்படுத்திக் கொண்ட சைத்தான் என்ன வரம் வேண்டும் கேள் என்றது ஆகா உன்னைத்தான் … Read more

Pithy thoughts – 11

நிலம் தீ நீர் வளி விசும்பென ஐந்தும் கலந்ததால் உலகம் தன் சகாக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்படலாயிற்று உலகவாசியான மனிதனும் தனிமை கொண்டான் தனிமை வாட்டியதால் அந்தரவாசியாய்க் கடவுளைப் படைத்தான் பசியெடுத்த கடவுளுக்குத் தன்னையே தின்னவும் கொடுத்தான் உண்டு கொழுத்த கடவுள் செய்வதற்கேதுமில்லையென இனப்பெருக்கம் செய்ய பலிகள் பெருகின சமயங்களில் கடவுளே பலியான கதைகளும் நடந்தன பசி கொண்ட சிங்கமொன்று சின்னஞ்சிறு மான்குட்டியை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்தது *** மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில … Read more

169. விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் கவிதைகள்

எனக்கு ஆசிய நாடுகளின் – அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் யாரையுமே தெரியாது.  இந்தோனேஷியாவில் Garin Nugroho என்ற இயக்குனர் பற்றி மட்டுமே தெரியும்.  அவரது The Poet என்ற அற்புதமான படத்தைப் பற்றி பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறேன்.  இப்போது விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் (Sapardi Djoko Damono) கவிதைகளை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அற்புதமான கவிதைகள்.  மிகத் தேர்ந்த மொழிபெயர்ப்பு.  தமிழ் மொழிபெயர்ப்பு … Read more

சூரரைப் போற்று

சும்மா ஒரு ஜாலிக்காக சூரரைப் போற்று பார்க்க ஆரம்பித்தேன். மூணு நிமிடம் ஆகியிருக்கும். அந்த மூணு நிமிடத்திலேயே மரண கப்ஸா. அப்படியெல்லாம் விமானம் இறங்குவதற்கு மறுக்க மாட்டார்கள், உலகின் எந்த மூலையிலும். அடுத்து ரயில் காட்சி. எல்லோரும் அந்தக் காலத்து சபா நாடகம் மாதிரி ரெக்கார்டிங் தியேட்டரில் தொண்டை வரள கத்தியிருப்பார்கள் போல. காட்டுக் கத்தல் கத்துகிறார்கள். அடுத்து நடிகவேள் கருணாஸ் ஒரு பிராமணரைக் கேலி பண்ணுவது போல் பிராமண பாஷை பேச ஆரம்பித்ததும் குமட்டிக் கொண்டு … Read more