வாசகர் சந்திப்பு பற்றி…

நேற்றைய வாசகர் சந்திப்பு பிரமாதமாக இருந்தது. எல்லோருமே மிகப் பொறுப்பாகப் பேசினார்கள். 40 பேர். இன்னொரு இருபது பேரை அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். முதல் முதலாக ஒரு உள்வட்ட சந்திப்பில் இணைப்பதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதுவரை ஒரு மின்னஞ்சல் கூட இல்லாமல் எந்த அறிமுகமும் இல்லாமல் எப்படி என்ற தயக்கம். அப்படியும் நாலைந்து பேரை இணைத்தேன். அடுத்த சந்திப்பில் இந்த முறை இணைய முடியாதவர்களையும் இணைக்கலாம். நூறு பேர் வரை கொள்ளும். கோவிட் … Read more

ArtReview பத்திரிகையில் என் கட்டுரை : India is choking

லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ArtReview Asia பத்திரிகையின் இன்னொரு சகோதரப் பத்திரிகை ArtReview. ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவுக்குக் கட்டுரையை அனுப்பிய பிறகு அவர்கள் ஆர்ட்ரெவ்யூவுக்கும் ஒரு கட்டுரை கேட்டார்கள். அதனால் உடனடியாக அதற்கு வேறொரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். ஜெட் வேகத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த வித்யா சுபாஷுக்கு நன்றி. https://artreview.com/india-is-choking/

ராஜேஷ் குமார்

என்னுடைய மலையாள நண்பர்கள் யாரோடும் இப்போது எனக்குத் தொடர்பு இல்லை. மாத்யமம் பத்திரிகையில் கண்ணன் இருந்தார்.  விஜயகுமார் குனிசேரி ஒரு அற்புதமான மனிதர்.  கவிஞர்.  கோவையில் வசித்தார்.  மாத்ருபூமி பத்திரிகையில் பணி புரிந்தார்.  நான் எப்போது கோவை சென்றாலும் என் குடி நண்பர் அவர்தான்.  அவருடைய மகன் என் வாசகர்.  விஜயகுமாருக்குத் தமிழ் நன்றாகப் படிக்கவும் பேசவும் தெரியும் என்பதால் என் எழுத்தும் நன்கு பரிச்சயம்.  அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் மகன் மாணவர்.  பிறகு … Read more

வாசகர் வட்ட சந்திப்பு

நாளை மாலை ஆறரை மணிக்கு வாசகர் வட்ட சந்திப்பு உள்ளது. இது நினைவூட்டல். கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஐடி நம்பர், பாஸ்கோட் அனுப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். விடுபட்டிருந்தால் எழுதவும். கலந்து கொள்ள விரும்பிய பல நண்பர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. ஒரே காரணம், அவர்களுடைய முதல் கடிதமே அதுவாகத்தான் இருக்கிறது. உங்களோடு எந்தப் பழக்கமும் இல்லாமல் எப்படி சந்திப்பில் இணைத்துக் கொள்வது? அரை மணி நேரத்துக்கு முன்னால் ஒரு ஃபோன். எடுத்தேன். வாசகர். முதல் போன். … Read more

தமிழ்நாடு அரசின் இலக்கிய விருதுகள் பற்றி ஜெயமோகன்

இந்த அறிவிப்புகளுக்குக் காரணமாக அமைந்த இரண்டு கடிதங்களை (முதல்வருக்கு நான் குமுதத்தில் எழுதியவை) என் தளத்தில் வெளியிட்டிருந்ததை ஜெயமோகன் படித்தாரா என்று தெரியவில்லை. படித்திருந்தால் அவருக்கு ஒரு சில விவரங்கள் தெரிந்திருக்கும். முதல் கடிதம் குமுதத்தில் வந்த உடனேயே – அதாவது மே 25-ஆம் தேதியே தமிழக முதல்வர் தலைமைச் செயலாளரிடம் இந்தக் கடிதம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துவிட்டதாகத் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு ஐஏஎஸ் மூலமாக எனக்குத் தெரியவந்தது. இதை நான் குறிப்பிடலாமா என்று … Read more

இதுதான் வித்தியாசம்… அராத்து

அராத்து முகநூலில் எழுதியது: மக்கள் வாசிக்கிறார்களோ இல்லையோ அடிப்படையிலேயே ஆதி காலம் தொட்டு எழுத்தாளர்களுக்கு எதிரான மனநிலையிலேயே இருந்து வந்திருக்கிறார்கள். புலவர்களின் வறுமையில் இருந்து தொடங்குகிறது இந்த இழிவான வரலாறு. என்னை ஏண்டா நாகரீகமா ஆக்க முயற்சி பண்ற ? என்ற சீற்றத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தடுப்பூசி போட வந்த மருத்துவக்குழுவை வட இந்திய கிராமம் ஒன்றில் உருட்டுக்கட்டையால் அடித்துத் துரத்தியதுடன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டியதுதான். இது எங்கே வந்து நிற்கிறது என்றால் இன்றைய இளைய தலைமுறை … Read more