பிரேம த்ருதி* (திருத்தப்பட்டது)

ஞாயிற்றுக்கிழமை காலைஇறைவியின் அழைப்பு இல்லைசாலைகளில் நடமாட்டம் இல்லை’ஒருநாள் இருநாள் அழைக்காவிட்டால் என்ன,முதலில் என்னை நம்பு’என்கிறாள் இறைவிஆனால்அறிவின் கண்களுக்குத் தெரிவதுஉணர்வின் இதயத்தை எட்டுவதில்லைநீ இந்நேரம் என்ன செய்கிறாய், இறைவி?பூனைக்குப் பால் வைக்கிறாயோ?லியோவின் முதுகைத் தடவிக் கொஞ்சுகிறாயோ?நித்திரையில் மூழ்கி கனவில் மிதக்கிறாயோ?அல்லது, சமைத்துக்கொண்டிருக்கிறாயோ?புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகிறாயோ?கோப்பையில் மதுவை நிரப்புகிறாயோ?இருபத்து நாலு மணி நேரமும்உன் நினைவு என் மனதைநதியெனச் சுழற்றிகரையைத் தொடாமல் குடைகிறது எனக்கும் வேலையில்லாமல் இல்லைஆனால்’நீ என் சுவாசம்’ என்று சொன்னால்நீயும் சமூகமும்நாடக வசனம் என்று சிரிக்கிறீர்கள்ஏய், இறைவி,பிரக்ஞையின்றி சுவாசம் … Read more

பிரபஞ்ச லயம்

முன்னறிவிக்கப்பட்ட முடிவுகளின் சுமை கவிதையைப் படித்து விட்டு ஸ்ரீராம் இவ்வாறு எழுதியிருந்தார்: கடவுள் சாரு நீங்கள்.  இந்தக் கவிதையை எழுதியவன் கட்டாயம் கடவுளாகத்தான் இருப்பான்.  வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தத்க்ஷணம் இந்தக் கடிதத்தை இங்கே பகிர்வதற்குக் காரணம், இதை எழுதும்போது நானுமே இப்படித்தான் உணர்ந்தேன்.  இதை வாசிப்பவர்களுக்கு ‘இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறதே’ எனத் தோன்றும்.  அப்படித் தோன்றினால் நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். கேத்தான் மேஹ்தா இந்தியாவின் … Read more

முன்னறிவிக்கப்பட்ட முடிவுகளின் சுமை

1 முதல் நாள் ஆக்கிய சோறில் நீரூற்றிமறுநாள் காலையில்கொஞ்சம் மோரும்சின்ன வெங்காயமும் போட்டுமாகாளிக் கிழங்கு ஊறுகாயோடுமூணு தம்ளர் குடிப்பதே என் காலை உணவுநீராகாரம்அதுவே நாள் பூராவுக்குமான என் சக்தி நேற்று வெளியே சென்று விட்டதால்சமையல் இல்லைஇன்று நீராகாரம் இல்லை நடைப்பயிற்சியின் போதுகாலை ஏழரைக்குசங்கீதா உணவகத்தில் காஃபிஒவ்வொரு மேஜையிலும்இட்லி வடை பொங்கல் தோசைமினி டிஃபன் என்றுவிதவிதமான சிற்றுண்டிகள்அமர்க்களமாய் மணம் பரப்பும்ஆசையாய் இருக்கும்ஆனால் பசிக்காது இன்று நீராகாரம் இல்லையானதால்ஏழிலிருந்தே பசித்ததுஇத்தனைக்கும் தினமும் இரவுசாப்பிடாதவன்நேற்றிரவு இரண்டு கல்தோசைசாப்பிட்டிருந்தேன் பிரச்சினை இதுதான்இல்லை என்று … Read more

டி

துறவி ஒருவரிடம்பத்திரிகையாளன் கேட்டான்:‘நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா?’ துறவி சற்றே துயரம் தோய்ந்தகுரலில் சொன்னார்:‘சிறுவயதில் துறவு வந்துவிட்டதுயாரையும் நமஸ்கரித்ததில்லைஇனி வாய்ப்புமில்லை’ எனக்கும் ஒரு ஆசைநிறைவேறாததுயாரையும் டி போட்டு அழைத்ததில்லை.இருபத்தைந்து வரைடி இருப்பதே தெரியாது. எங்கள் ஊரில் ர் தான் ன்வந்தார் போனார் என்றால்கத்திதான் பேசும்வந்தார்கள் போனார்கள்என்றே சொல்ல வேண்டும்பெற்றோரே தம் மக்களைபன்மையிலேதான் அழைப்பர் பிறகு டி கலாச்சாரம்என் மனைவி, பத்து வயது இளையவள்‘வாடா, போடா’ என சகட்டுமேனிக்குசபைகளில் விளையாடுவாள்நான் லஜ்ஜையில் நெளிவேன்ஆனால் அவளை நான் டி போட … Read more

இறைவியின் இரு வார்த்தை

தற்கொலைக்கு நாள் குறித்துஏற்பாடுகளை முடித்த அன்றுஇறைவியின் இரு வார்த்தைஎன்னுயிரை மீட்டது ‘நான் செத்தால் என்ன செய்வாய்?’’செத்து விடுவேன்’ மறுநாள் அது பற்றிப் பேசும்போது’நான் சொன்னது ஞாபகமில்லைநானுமே அப்போது நிம்மதி கெட்டிருந்தேன்’என்றாள்ஆச்சரியமில்லைஅவள் சொல்லாமலிருந்திருந்தாலும்பெரிய விஷயமில்லை தற்கொலையெல்லாம் அவளுக்குஜுஜுபிமரணத்தையே விழுங்கிவாந்தியால் தப்பியவள்என் தற்கொலைக் கவிதையைப் படித்து விட்டுஏதோ சினிமாவைப் பற்றிக் கேட்பது போல்’நீ தற்கொலை செய்து கொண்டால்உன் மனைவி என்ன செய்வாள்? பூனைகள் என்ன செய்யும்?’என்றாள் ’ஒரு பிரச்சினையுமில்லை; பூனைகளைஅழைத்துக்கொண்டு மகன் வீடுசென்று விடுவாள்’ பிறகுசென்னையின் வெயிலையும் மழையையும்விசாரிப்பது போல்என்ன … Read more

அறம்

இன்று மைலாப்பூர் அஞ்சல் நிலையத்தில்ஒரு வேலைவேலை முடிய மூன்று மணி நேரம்அத்தனை நேரமும்நான் ஒரு பைத்தியக்காரனைப் போல்உணர்ந்தேன்கோணினேன்நெளிந்தேன்வளைந்தேன்முறுக்கினேன்கொட்டாவியாய் விட்டுத் தள்ளினேன்மோட்டுவளையைப் பார்த்தேன்வேண்டாம்அதை விவரிக்க இயலாது அப்போது ஒருத்தன் வந்தான்அகவை அறுபது இருக்கலாம்நெற்றியில் பட்டைகுமாஸ்தா இங்லீஷில் அஞ்சல் நிலையஅதிகாரியுடன் பேசினான்பார்த்தாலே தெரிந்ததுபேச்சிலும் புரிந்ததுகுறிப்பிட்ட உயர்சாதிக்காரன் அவனுடைய தகப்பனும் தாத்தனும்ஹிண்டு நாளிதழுக்குக் கடிதங்கள்எழுதியிருப்பார்கள்இவன் அவர்களின் வாரிசாகநின்றான் சொன்னான்,’அஞ்சல் நிலைய வாசலில்ஒரு நாய் படுத்துக் கிடக்கிறதுஅதை அப்புறப்படுத்துங்கள்தில்லி உச்சநீதி மன்றமேநாய்களை அப்புறப்படுத்தஉத்தரவு போட்டு விட்டதுநீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை?அது யாரையும் கடித்து … Read more