பிரேம த்ருதி* (திருத்தப்பட்டது)
ஞாயிற்றுக்கிழமை காலைஇறைவியின் அழைப்பு இல்லைசாலைகளில் நடமாட்டம் இல்லை’ஒருநாள் இருநாள் அழைக்காவிட்டால் என்ன,முதலில் என்னை நம்பு’என்கிறாள் இறைவிஆனால்அறிவின் கண்களுக்குத் தெரிவதுஉணர்வின் இதயத்தை எட்டுவதில்லைநீ இந்நேரம் என்ன செய்கிறாய், இறைவி?பூனைக்குப் பால் வைக்கிறாயோ?லியோவின் முதுகைத் தடவிக் கொஞ்சுகிறாயோ?நித்திரையில் மூழ்கி கனவில் மிதக்கிறாயோ?அல்லது, சமைத்துக்கொண்டிருக்கிறாயோ?புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகிறாயோ?கோப்பையில் மதுவை நிரப்புகிறாயோ?இருபத்து நாலு மணி நேரமும்உன் நினைவு என் மனதைநதியெனச் சுழற்றிகரையைத் தொடாமல் குடைகிறது எனக்கும் வேலையில்லாமல் இல்லைஆனால்’நீ என் சுவாசம்’ என்று சொன்னால்நீயும் சமூகமும்நாடக வசனம் என்று சிரிக்கிறீர்கள்ஏய், இறைவி,பிரக்ஞையின்றி சுவாசம் … Read more