பூச்சி 28

கணேஷின் கேள்விகள் சாதாரணமாகப் புறக்கணித்து விடக் கூடியவை அல்ல.  அதனால்தான் இத்தனை விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இதே கேள்விகளை, சந்தேகங்களைத் தாங்களும் கொண்டிருப்பதாகப் பலரும் எனக்கு எழுதியிருக்கின்றனர்.  ”ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் மாடுகளைக் கொடூரமாக கொல்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு உயிரைக் கொல்வதே கொடூரம்தான்! மனிதன் சாப்பிடுவதற்காக ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் இறால், புறா, காடை, இன்னபிற என அனைத்தையுமே கொல்லத்தானே செய்கிறான்? கொல்வதில், கொடூரமாகக் கொல்வது அன்பாகக் கொல்வது என தனித்தனியாக ஏதேனும் இருக்கிறதா?” … Read more