பூச்சி – 37

கறுப்பன் எழுந்து கொள்ள முயற்சித்தான்.  ம்ஹும்.  முடியவில்லை.  அச்சமும் நடுக்கமும் அவமானமும் அவனைத் தரையிலேயே ஆணி அடித்தாற்போல் வைத்து அழுத்தியது.  பிறகு அந்தத் தேன்குரலைக் கேட்டான். “த்ரிஸ்த்தான்…” இந்தக் கோவிலுக்கு வெளியே வேறோர் காலத்தில் இதேபோல் அவன் அழைக்கப்பட்டிருக்கிறான்.  அப்படியானால் இது கனவு அல்ல; நனவுதான்.  சீமாட்டிதான் வந்திருக்கிறாள்.  தன் அருகே தெரியும் அவள் கால்கள் உண்மைதான்.  அவன் பதில் சொல்லியாக வேண்டும்; அல்லது சாக வேண்டும்.  அவன் பேசியே ஆக வேண்டும்.  அவனிடம் வந்து சேர்ந்த … Read more