மே 22 மாலை 6 மணி

மே 22-ஆம் தேதி மாலை ஆறு மணி, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலச்சுவடு வெளியீடாக பாகீரதியின் மதியம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில் அடியேன் பேச இருக்கிறேன்.  இது பா. வெங்கடேசனின் இரண்டாவது நாவல்.  அழகியசிங்கர், அசதா ஆகியோரும் பேசுவர். இலக்கியச் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் இதுவரை பேசியது போல் இருக்காது இந்த விழாப் பேச்சு.  மிகவும் மாறுபட்டதாகவும், இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை என்பதாகவும் இருக்கும்.  கூட்டம் வரவழைப்பதற்காக … Read more

சில எதிர்வினைகள்

இன்றைய தி இந்துவில் வெளிவந்துள்ள கட்டுரைக்கு வந்த சில எதிர்வினைகளை இங்கே தருகிறேன். பா. ம. க. பற்றிய உங்களின் கருத்துக்கள் தமிழ் நாட்டின் ஒரு நடு நிலை வாக்காளனின் மன நிலை பிரதிபலிப்பு. இவர்களின் கடந்த 25 ஆண்டு கால அரசியல் எங்கெல்லாம் சறுக்கியது, வழுக்கியது என்ற விமர்சனங்கள் உண்மையானது. மாற்றம் வார்த்தையில் மட்டும் அல்ல: வாழ்க்கையிலும் இருக்கிறது என்ற உங்களின் பஞ்ச் அருமை! தொடருங்கள் உங்கள் விமர்சனங்களை! நெய்வேலி மதி *** இன்று தி … Read more

தலித்தும் வன்னியரும் ஒன்னா?

வாசகி: என்ன சாரு, காத்தாலேர்ந்து உங்க ஃபோன் எங்கேஜ்டாவே இருக்கு?  பொதுவா அப்படி இருக்காதே? சாரு: ஹிண்டுல ஒரு கட்டுரை வந்திருக்கு.  அதைப் பத்தி நிறைய பேர் கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, அதனாலதான். வாசகி: அதுதான் எப்பவுமே எதாவது ஒரு பத்திரிகைலே உங்க ஆர்ட்டிகிள் வர்றதே, அதுலே என்ன விசேஷம்? சாரு: இல்ல, இது அன்புமணி பத்திங்கறதாலெ கொஞ்சம் பரபரப்பாயிடுச்சு, தேர்தல் நேரமில்ல… வாசகி: அன்புமணியா, யார் அது? சாரு: பாமாக்கா தலைவர். வாசகி: பாமாக்காவா?  அப்டீன்னா? சாரு: … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சி.சு.செல்லப்பா – பகுதி 8

விமரிசனம் தவிர்த்து செல்லப்பா செய்த மற்ற இரண்டு காரியங்கள் தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கக் கூடியவை. புனைகதையில் அவர் செய்த சாதனைகளைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன். பண்டிதர்களுக்கும், ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கும், ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் எதிராக ஒற்றை மனிதராக, கிட்டத்தட்ட ஒரு கெரில்லா போராளியைப் போல் போராடியிருக்கிறார் செல்லப்பா. அந்த வகையில் இன்றைய தினம் இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அந்த மகத்தான மனிதருக்கே கடமைப்பட்டிருக்கிறார்கள். ‘எழுத்து’ என்ற பத்திரிகை மூலம் அவர்தான் சமகால இலக்கியத்துக்கான … Read more

சீரழிவுக் கலாச்சாரம் – ஜி.கார்ல் மார்க்ஸ்

முகநூலில் ஜி.கார்ல் மார்க்ஸ் எழுதியது: எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வந்துவிட்டன. பிரச்சாரம் முழுவேகத்தில் நடக்கிறது. உண்மையான களப்பணியை ஒவ்வொரு கட்சியும் இனிதான் தொடங்கும். அது என்ன களப்பணி? வேறென்ன.. வாக்குக்கு பணம் கொடுப்பதுதான். இந்த தேர்தலில் ‘வாக்குக்குப் பணம்’ தரும் விவகாரம் எளியமக்களின் விவாதமாகக் கூட மாறியிருக்கிறது. தமிழகத்தில் இதொன்றும் புதிதல்ல. ஆனால், இதற்குப் பின்னுள்ள ‘சீரழிவுதான்’ முக்கியம். ‘வாக்குக்குப் பணம்’ என்பதை நாம் ஏன் அவமானமாகக் கருதுவதில்லை? இந்த மன மாற்றத்திற்குப் பின்னால், அரசியல் … Read more