நான் தான் ஔரங்ஸேப்… : நேச மித்ரன்

கற்பிதங்களின் பலிமேடை மீது மரச்சுத்தியலால் தட்டுதல் இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள் தான் தெய்வங்கள் ஆக்கப்படார்கள். எதிர்திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் தான் அவுரங்கசீப். ஒரே மொழி ஒரே மதம் மற்ற மதங்கள் யாவும் கீழானவைஎன்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் … Read more

கல்கியும் புதுமைப்பித்தனும் தமிழ்ச் சமூகமும்…

சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்ட புதினங்களைத் தமிழில் பலர் எழுதியிருக்கிறார்கள்.  சட்டென்று நினைவுக்கு வருவது சாண்டில்யன், வே. கபிலன், கோவி. மணிசேகரன், அகிலன், நா. பார்த்தசாரதி, கல்கி, ஒரே ஒரு சரித்திர நாவல் எழுதிய சுஜாதா.  இவர்களில் கல்கி மட்டுமே சூப்பர் ஸ்டார்.  அவருடைய பொன்னியின் செல்வன் அளவுக்கு வேறு யாரும் சுவாரசியமாக எழுதியதில்லை.  வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களில் பொன்னியின் செல்வனைப் படிக்காதவர்கள் சிலர் மட்டுமே.  பொதுவாக ஜனரஞ்சக எழுத்தைப் படிக்க விரும்பாத நானே அந்த நாவலை இரண்டு … Read more

சீலே பயணம், ஆவணப்படம் தொடர்பாக…

தெ அவ்ட்ஸைடர் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.  தில்லியும் கோவாவும் சீலேயும்தான் பாக்கி.   போயும் போயும் ஒரு ஆவணப் படத்துக்கா அம்பது லட்சம் ஆகும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.  கேமரா தளவாடங்கள் வாங்குவதற்கே பத்து லட்சம் ஆகி விட்டது.  கேமராமேன் சம்பளம், தங்கும் செலவு, பயணம், உணவு என்று செலவு அடித்துக் கொண்டு போகிறது.  எல்லா செலவையும் பிச்சை எடுத்துத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் பெரிய செலவுக்கு மட்டும் கையேந்தினாலும் கிடைப்பதில்லை.  … Read more

சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா?

செக்ஸ் இல்லாமல் ஒரு ஆயிரம் பக்க நாவலை எழுதியிருக்கிறேன் என்று நேற்று எழுதியதும் சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா என்று கேட்டிருக்கிறார் நண்பர் சமஸ்.  விவாதங்கள் என்றால் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்.  பொதுவாக இலக்கிய சமாச்சாரங்கள் எதுவுமே பொதுவெளியில் கவனம் பெறுவதில்லை.  அதை முதல் முதலில் உடைத்தவர் சமஸ்தான்.  அவர்தான் தமிழ் இந்துவில் எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டார்.  அதுவரை அந்த மரியாதை எல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.  ஒரு எழுத்தாளர் இன்னமும் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம்

நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வர முடியவில்லை.  இரண்டு காரணங்கள்.  ஒன்று, ஆவணப் படப்பிடிப்பு.  இரண்டு, நான் தான் ஔரங்ஸேப்… நாவலின் இறுதிக் கட்ட பிழை திருத்த வேலை.  ஒரு பிழை கூட இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நிறுத்தற் குறிகளில் கூட பிழைகள் இருக்கலாகாது.  பிழை திருத்தம் முடித்து நாவலை பதிப்பகத்தில் கொடுத்து விட்டேன்.  இந்த ஆகஸ்ட் இறுதிக்குள் நாவல் வந்து விடும்.  ராம்ஜி முன் வெளியீட்டுத் திட்டம் அறிவித்திருக்கிறார்.  நாவல் … Read more

யூதாஸ் (5)

150 சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்த பாஸ்டன் பாதிரியின் முழுப் பெயர் ஜான் கேகன்.  அவர் சிறையில் சக கைதியால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்டார்.  இது பற்றி டாக் பேசுகிறார். ”(எனக்கு) மாசிமோ ஸ்டான்ஸியோனேவின் குழந்தைகள் படுகொலை ஓவியம்தான் நினைவுக்கு வருகிறது. அவ்வோவியத்தில் ஒருவன் இரக்கமற்று குழந்தையின் மீது வாளைச் சொருக கை உயர்த்தி இருப்பான். குழந்தையின் தாய் போராடிக் கொண்டிருப்பாள். தரையில் ஏற்கனவே வெட்டப்பட்ட குழந்தைகளின் பிஞ்சு மணிக்கட்டுகள் கிடக்கும். வேதனையில் கதறிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் … Read more