இந்த இளம் காலை நேரத்தில் ஒரு கவிதை: மாடப்புறா சொன்ன கதை

தர்ஹாவின் மாடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான புறாக்களில் நானும் ஒருத்தி எங்களுக்கு யாரும் பெயரிடுவதில்லை என்றாலும் உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிமித்தம் நானே எனக்கொரு பெயர் சூட்டிக் கொண்டேன் பர்வீன் பந்துவில் வரும் ப பயத்தில் வரும் ப அல்ல இதிலொன்றும் எனக்குப் பிரச்சினை இல்லை இதை நான் சொல்லக் கேட்டு எழுதுபவன் ஆட்சேபிக்கலாம் எஜமானின் அருள் நாடி வருவோரும் செல்வோரும் பலருண்டு சிலபேர் இங்கேயே சிலநாள் தங்கிச் செல்வதுமுண்டு குளுந்த மண்டபத்தில் அமர்ந்து தன் கதையை … Read more

இன்றைய மூன்றாவது கவிதை: காடு சுடும் மணம்

வீட்டுக்குப் பின்னே சுடுகாடு சிறு வயதில் தெரிந்த மரண மணம்  மழைக் காலத்தில் அதிகமுமுண்டு முதல் மழை விழுந்த மண்  அம்மா சாணி மிதித்து றாட்டி தட்டும் மணம் கண்ணில் விழும் தூசைப் போக்க பக்கத்து வீட்டு அத்தாச்சி பீய்ச்சி அடிக்கும் முலைப்பால்  அத்தையின் வாய்  அம்மாவின் கை  நைனாவின் ரத்தினம் பொடி  கோழிப் பீ தாழம்பூ தைத்த சடை போட்டு வரும் அக்காக்களின் மணம் தர்ஹாவின் கொமஞ்சான்  எஜமானின் அருள்  மனாராக்களில் வாசம் செய்யும் புறாக்களின் … Read more

இன்றைய இரண்டாவது கவிதை: காற்றிலாவது…

காற்றிலாவது… அவளுக்குப் பதினாறு வயது பேரழகு என்று நீங்கள் எதைச் சொல்வீர்களோ அதையெல்லாம் மீறிய அழகு ஒருநாள்  கைகாலை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை சப்தநாடியும் செயலிழந்து போனது LGMD என்றார் மருத்துவர் இனிமேல் அந்தப் பெண்ணுக்கு ஆட்டமில்லை  ஓட்டமில்லை பௌதிக இயக்கமில்லை  துன்ப சாகரத்தில் வீழ்ந்தது  குடும்பம் வாழ்க்கை அபத்தமென்றார் நண்பர் ஜோ எல்லாம் கர்மா என்றாள் மூதாட்டி இன்று எனக்கொரு  ஜனன செய்தி வந்த போது எதுவொன்றும் சொல்லத் தோணாமல் விக்கித்து நின்றேன் தாள … Read more

லும்ப்பன் சூழ் உலகு

பபத்தாண்டுகளாகப் பேட்டியே கொடுத்ததில்லையாம் இப்போதுதான் கொடுத்த்திருக்கிறான் இந்த  நடிகனின் பேட்டியைக் கேளென்றான் நண்பன் பிரபல நடிகன்  பிரபலத் தொலைக்காட்சி மூணே நாளில் நூறு லட்சத்தைத் தாண்டிய பார்வையாளர்கள் ‘சீறும் பாம்பை நம்பலாம் சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்ற வாசகத்தை மூணு சக்கர  வாகனத்தில் எழுதிச் செல்லும் ஒருவனிடம் ரூபாய் ஆயிரம் பத்தாயிரம் கோடி கிடைத்தால் என்ன ஆவான் அவன்? திக்கினான் திணறினான் உளறினான் நெளிந்தான் தலையில் நூறு கிலோ புகழ் மூட்டை கூடவே ஆணவமும் அகங்காரமும் பிதுங்கித் … Read more

விபரீதம்

எனக்குப் பிடித்த நாவல் புயலிலே ஒரு தோணி என்கிறார் நடிகர் விஜய் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுகிறார்கள் சென்னையில் முதலமைச்சர் தன் வீட்டிலிருந்து தன்னுடைய காரைத் தானே ஓட்டிக் கொண்டு தலைமைச் செயலகம் செல்கிறார் நாலு காலில் தவழ்ந்து சென்று தன் தலைவியை நமஸ்கரித்த முன்னாள் மந்திரி தலைவியின் பெயர் சொல்லி அழைக்கிறார் மற்றவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கிறார் கமல்ஹாசன் இலக்கிய நூல்களின் விற்பனை ஒரு கோடியைத் தாண்டுகிறது பிரபலத் தமிழ் எழுத்தாளனிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு ஆறு … Read more

எழுத்தாளனும் சமூகமும்…

எழுத்தாளர்கள் கொண்டாடப்படவில்லை என்று நான் அடிக்கடி எழுதுவதைக் கண்டு பலரும் சந்தேகம் கொள்கிறார்கள், முகம் சுளிக்கிறார்கள், சிலர் கோபப்படுகிறார்கள். சிலருக்கு உண்மையிலேயே புரியவில்லை. இதை விடவும் எழுத்தாளனை ஒரு சமூகம் எப்படிக் கொண்டாட முடியும் என்பது அவர்களின் கேள்வி. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். இன்னமும் ஒரு சினிமாக்காரரை ஒரு எழுத்தாளன் சந்திக்க வேண்டும் என்றால் – வசனம் எழுதுவதற்காக அல்ல – சாதாரணமாக ஒருவரை ஒருவர் நட்பு ரீதியாக சந்திப்பதைச் சொல்கிறேன் – எழுத்தாளன்தான் நடிகரையோ … Read more