முதல் நூறு – 2

2.  தாங்கள் என்றாவது சிறார்களுக்காக ஒரு நாவல் எழுதும் எண்ணம் ஏதேனும் உள்ளதா? அவ்வாறு எழுதினால் அந்த நாவல் எதைப் பற்றியதாக இருக்கும்? பிரியா, திருநெல்வேலி. பதில்: ஒருமுறை சிறார்களுக்காக கல்கியில் குட்டிக் கதைகள் எழுதலாம் என்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது.  கல்கி ஆசிரியரின் யோசனைக்கு ஏற்ப ஒன்றிரண்டு எழுதியும் அனுப்பினேன்.  ஆனால் “கடினமாக இருக்கிறது, புரியாது” என்றார்கள்.  அதோடு விட்டு விட்டேன். சிறார்களுக்குச் சொல்ல என்னிடம் ஏராளமான விஷயங்கள் உண்டு.   அறிவு என்ற பெயரில் மேற்கத்திய விஷயங்கள் … Read more

சொற்கடிகை – 17

ஞாயிற்றுக்கிழமை அன்று புத்தக விழாவில் ஒரு நண்பர் குடிக்க அழைத்தார்.  இதுவே நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தால் யோசிக்காமல் சென்றிருப்பேன்.  குடிக்கவும் பிடிக்கும். நண்பரும் பிடித்தமானவர்.  அடிக்கடி சந்திக்கக் கூடியவரும் இல்லை.  இப்போது என் வாழ்க்கையே மாறி விட்டது என்று அவரிடம் சொன்னேன்.  அவருக்குப் புரியும்படி சொல்ல அங்கே இயலவில்லை.  நான் குடிப்பது இல்லை.  அது முதல் விஷயம்.  அப்படியே குடிப்பதாக இருந்தால் அந்த வைன் இங்கே கிடைக்காது.  அப்படியே கிடைத்தாலும் நான் செல்ல முடியாது.  ஏனென்றால் ஞாயிறு மதியமே ஔரங்ஸேப் அத்தியாயம் போயிருக்க வேண்டும்.  நானோ தினமும் புத்தக விழாவுக்கு வந்து … Read more

சொற்கடிகை – 16

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என் நாவலைப் படித்திருக்கிறீர்களா?  அதில் பாலா என்று ஒரு ஆள் வருவார்.  மார்கிஸிஸ்ட் புத்திஜீவி.  அந்த ஆள் நாவலின் கதைசொல்லியான சூர்யாவிடம் ஒரு பண்ணையார் போல் நடந்து கொள்வார்.  அம்மாதிரி என் நண்பர் ஒருவரிடம் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவர் நடந்து கொண்டார்.  எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்.  பண்ணையார்த்தனமெல்லாம் காட்டினால் விலகி விடுவேன்.  விலக்கி விடுவேன். நிலப்பிரபுத்துவப் பண்ணையார்த்தனத்துக்கெல்லாம் என்னிடம் மன்னிப்பே கிடையாது.  என்ன ——க்கு இவர்கள் ஃபூக்கோ —————-யையெல்லாம் … Read more

முதல் நூறு – 1

எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விடுகிறேன்.  தொகுப்பில் எதைச் சேர்க்கலாம், எதை விடலாம் என்பதை நண்பர்களின் பொறுப்பில் விட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.  காதல் என்றால் என்ன என்பது போன்ற கேள்விகளை மட்டும் தவிர்த்து விடுகிறேன்.  கே: தற்கால இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரைகள் என்ன? மூர்த்தி கமல் யாருக்கும் நான் அறிவுரை கூறுவதில்லை.  ஆனாலும் நீங்கள் கேட்டு விட்டதால் சொல்கிறேன். இப்படி அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டுத்தான் இப்படி குட்டிச்சுவராகக் கிடக்கிறோம்.  யார் பேச்சையும் கேட்காதீர்கள்.  குறிப்பாக … Read more

சொற்கடிகை – 15

ஸீரோ டிகிரி நாவல் வெளிவந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் அள்ளிக் கொண்டுதான் போகிறார்கள்.  அந்தப் புத்தகம்தான் தினமும் அதிகம் விற்கிறது.  நேற்று ஒரு பதின்பருவத்து இளைஞன் அந்த நூலில் கையெழுத்து வாங்கினான்.  நான் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ”புத்தக விழாவுக்குப் போனால் நீ எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாங்கு, ஆனால் அந்த ஸீரோ டிகிரியை மட்டும் வாங்கவே வாங்காதே என்றார்கள் என் அம்மா, அதனாலேயே இதை வாங்குகிறேன்” என்று சத்தமாகச் சொன்னான் அந்தப் பையன்.  … Read more

நூறு கேள்விகள்

நூறு கேள்விகள். ஒருவரே எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். முதல் நூறு என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடலாம் என்று ஒரு நண்பர் சொன்னார். பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது வாட்ஸப். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அனுப்பலாம். டார்ச்சர் கோவிந்தன் டார்ச்சராக ஒரு கேள்வி கேட்டு ஆரம்பித்து வைப்பார் என நினைக்கிறேன். வரவேற்கிறேன். நூறு கேள்விகளும் என் பதில்களும் புத்தகமாக வரும். … Read more