சனல்லாஹ் இப்ரஹீம்

Sonallah Ibrahim எகிப்தின் மிக முக்கியமான எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கும் இவர் நாஸர் காலத்தில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். செய்த குற்றம், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததுதான். இப்போதும் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி விரிவாக அ-காலம் தொகுப்பில் எழுதியிருக்கிறேன். அ-காலம் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் கிடைக்கும். இப்ரஹீம் பற்றிய கட்டுரையிலிருந்து: 2003-இல் இப்ரஹீம் எகிப்திய அரசின் உயரிய இலக்கிய விருதான அராபிய நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பொதுவாக கலகக்காரர் … Read more

புத்தக விழாவில் என் புதிய புத்தகங்கள்

கடந்த ஆறு மாதங்களாக நண்பர் ஸ்ரீராம் மருத்துவமனை முடிந்து வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் போனில் பேசி விட்டு நள்ளிரவு வரை நான் இணைய தளத்தில் எழுதியவற்றை சப்ஜெக்ட்வாரியாகத் தொகுத்துக் கொண்டு இருக்கிறார். ஆறு மாதமாக இதேதான் வேலை. தூங்கி எழுந்து மறுநாள் மருத்துவமனை. நண்பர்களைச் சந்திப்பது இல்லை. சினிமா இல்லை. வேறு பொழுதுபோக்கு இல்லை. மாதம் ஒருமுறை மனைவியைப் பார்க்க ஊருக்குப் போய் வருவார். இப்படியாக பத்து புத்தகங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அந்தப் பத்தையும் இந்தப் புத்தக … Read more

ஸ்மாஷன் தாரா

2020 அக்டோபர் வாக்கில் – அதாவது சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு என் கவிதைகளைத் தொகுத்து என் சிநேகிதியிடம் கொடுத்தேன்.  Mediocre என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்.  அவர் ஒரு cynic என்று நான் நினைப்பதால் இன்னொரு சிநேகிதியிடம் கொடுத்தேன்.  இவர் அவரை விடக் கடுமையான cynic என்று தெரியும்.  இருந்தாலும் வேறு யாரிடம் கொடுப்பது என்றும் தெரியாததால் கொடுத்தேன்.  இவரும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார்.  ஆனால் நான் சளைத்து விடவில்லை.  உங்களுக்கு ஒக்தாவியோ … Read more

மெஜந்த்தா

நான் வண்ணங்களின் ரசிகன். பிஸ்மில்லா பாடலை தினமும் முப்பது தடவையாவது கேட்டு விடுவேன். எழுதிக் கொண்டிருக்கும்போது அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். இந்தப் பாடலில் கைலாஷ் அணிந்திருக்கும் வாடாமல்லி நிறச் சட்டைத் துணியை எங்கேயாவது பார்த்தால் எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் வாங்கி விடுவது என்ற வெறியில் இருக்கிறேன். நாளை என்பதே நம் கையில் இல்லை என்கிறார் புனித். ஆனால் ஹெடோனிஸ்டுகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டம்தான். கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் … Read more

vibrations…

25 ஆண்டுகளுக்கு முன்பு. ஸீரோ டிகிரி வெளிவந்த நேரம்.  பல பத்திரிகைகளில் சர்ச்சையாக இருந்தது.  சீ அசிங்கம், மலம்.  இந்த மாதிரி.  தினமலரில் மட்டும் என் நண்பர் ரமேஷ் ஸீரோ டிகிரியிலிருந்து ஐந்து பக்கங்களை எடுத்து வாரமலரில் வெளியிட்டு, மணியார்டரில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள என் விலாசத்தையும் கொடுத்தார். பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று புத்தகத்தை முழுமையாகவே படித்து விட்டுத்தான் செய்தார்.  800 மணியார்டர்கள் வந்தன.  (நான்தான் புத்தகத்தை வெளியிட்டவன்.  தமிழில் எந்தப் பதிப்பகமும் … Read more

ஓப்பன் பண்ணா: An existentialist classic on ‘Ennui’

இன்று தமிழில் பெருவாரியாக எழுதப்படும் எதார்த்த பாணி எழுத்து எப்படிப்பட்டது? அவ்வகை எழுத்தை உருவாக்குபவர்கள் மனித வாழ்க்கையை மாட்டுத் தொழுவத்தைப் போல் காண்பவர்கள் என்று கருதுகிறேன். மாடுகளுக்கு என்ன தேவையோ அது மனிதர்களுக்கும் கிடைத்து விட்டால் போதும் என்று நினைக்கும் ’ஸில்ஸிலா’ அது. அப்படி நினைத்த கம்யூனிசம் என்ன ஆயிற்று என்று நம் எல்லோருக்கும் தெரியும். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அளவுக்கு நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு … Read more