மீண்டும் ராஸ லீலா… மீண்டும் ஜெகா…

ஜெகா பேச்சுத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்.  ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஜெகா எழுதியிருப்பதைத் தருகிறேன்: உலக இலக்கியங்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. தமிழ் புத்தகத்தை, செறிவான புரிதலோடு வேகமாக வாசிக்கும் பயிற்சி எனக்கு இருக்கிறது. ஆங்கிலப் புத்தகம் என்று வரும் போது தந்தியடிக்கும். ஏழாம் பக்கம் போய்த் திரும்ப ஆறாம் பக்கம் வருவேன், முழுமையான புரிதல் வரும்வரை பக்கங்களுக்குள் கபடி ஆடியபடியே இருப்பேன். இப்படியேதான் முன்பு கொஞ்சம் மார்க்கேஸ், ஓரான் … Read more

பிச்சைக்காரன் எழுதிய ஒரு சிறிய காதல் கதை

பிச்சைக்காரன் எழுதியிருந்த இந்தச் சிறிய காதல் கதை பிடித்திருந்தது… அவளை இம்ப்ரஸ் செய்ய அந்தக் காலத்தில் எனக்குத் தோன்றிய ஐடியா ரத்தக் கடிதம் எழுதுவது… முழுதும் எழுத முடியாவிட்டாலும் அவள் பெயரையாவது எழுதலாமே என நினைத்தேன்.. விரலில் எத்தனையோ முறை அடிபடுகிறது. ரத்தம் வருகிறது.. வலியெல்லாம் இருக்காது.. ஆனால் ஊசியால் கையைக் குத்திக் கொள்ள தைரியம் வரவில்லை.. ஃபிராடு ஐடியா ஒன்று தோன்றியது..பேசாமல் ஏதாச்சும் கோழி ரத்தத்தில் எழுதி அவளை ஏமாற்ற நினைத்து , அப்படியே செய்தேன்.. … Read more

சபரிமலைக்குச் செல்வதற்கு முந்தின தினம்…

குடிப்பவர்களை விட குடிக்காதவர்களே அதிக வில்லங்கம் கொண்டவர்களாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.  ஆனால் வாசகர் வட்ட நண்பர்கள் அப்படி அல்ல என்பதற்குப் பின்வரும் எழுத்தே சாட்சி.  வாசகர் வட்டத்தின் நிர்வாகியான செல்வகுமார் கணேஷ் சபரிமலைக்குச் செல்வதற்கு முந்தின தினம் கோவிலுக்குச் சென்றதை இப்படி எழுதியிருக்கிறார்.  ரசித்தேன்.  இவர் குறிப்பிடும் அடையார் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசனம் பண்ணினால் பணம் வரும் என்றார் என் நண்பர்.  அவரோடு பலமுறை சென்றேன்.  அவர் அப்பா மத்திய மந்திரி ஆனார்.  ஆனால் … Read more