எஃபத்தா : சிறுகதை : வளன்

“இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமானவரிடம் ‘எஃபத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது.” (மாற்கு 7: 34-35) கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடு டார்ச்செஸ்டர் பகுதியை இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறது. இங்கு வாழும் யாவருக்கும் இது தெரியும். நகரின் கிழக்குப் பகுதி நல்ல டார்ச்செஸ்டர் எனவும், மேற்குப் பகுதி தீய டார்ச்செஸ்டர் எனவும் அறியப்படுகிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்றால் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை வைத்து. … Read more