தொலைபேசி

எனக்குத் தெரிந்த அத்தனை எழுத்தாளர் நண்பர்களுக்கும் நான் ஏதாவது ஒரு சமயத்தில் ஃபோன் செய்தால் அவர்கள் அதை எடுப்பதில்லை.  சரி, அவர்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.  பலரும் எழுதும்போது ஃபோனை எடுப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் சொல்லி வைத்தாற்போல் எல்லோருமே 36 மணி நேரம் கழித்துத்தான் ஃபோன் செய்கிறார்கள்.  அல்லது, மெஸேஜ் அனுப்புகிறார்கள்.  குறைந்தது 36 மணி நேரம்.  ஒருநாள் காலை பத்து மணி அளவில் ஸக்கரியாவுக்கு ஃபோன் செய்தேன்.  எடுக்கவில்லை.  அதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை.  … Read more

க்ளப் ஹவுஸ் உரையாடல்

வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக க்ளப் ஹவுஸில் உரையாட இருக்கிறேன். சக எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகள் இருந்தால் கேட்க வேண்டாம். தமிழ் சினிமா பற்றிய கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டேன். https://www.clubhouse.com/join/zero-degree-publishing/hqen5nVt/xkjKqWlD?fbclid=IwAR2WShlslmTIBfhuAnJkFGeGjglBtqE75PhZodwNfcY-Vkp4HwY3A1Z045k

சமகாலத் தமிழ் இலக்கியச் சூழல்

ஜெயமோகனின் வாசகர்கள் என்றுதான் இதற்கு நான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அந்தத் தலைப்பு பலவித ஹேஷ்யங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன். செய்வதற்கு எனக்குப் பல வேலைகள் உள்ளன. இரவு பகலாகக் கண் விழித்து ஔரங்கசீப் எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தாநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு சீனியை அழைத்தேன். மிரண்டு போனார். இதுதாங்க, ராப்பகலா எழுதுறதுங்கிறது என்றேன். பழைய ராணுவ ஒழுங்கு எதுவும் இல்லை. நாவல் எழுதும்போது நேர ஒழுங்கு உட்பட எந்த ஒழுங்கையும் … Read more