நான்தான் ஔரங்கசீப்… பற்றிக் கொஞ்சம்

இன்று இரவு ஒன்பது மணிக்கு bynge.in செயலியில் வெளிவர இருக்கும் நான்தான் ஔரங்கசீப்… நாவல் எனக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.  இதேபோல் நான் ஒரு பத்திரிகைக்காக எழுதிய நாவல் ராஸ லீலா. அது பற்றித் தமிழ் வாசகர்கள் யாருக்கும் தெரியாது.  காரணம், ஒரு காகிதத்தில் தமிழில் எழுதி அதை நெட் செண்டரில் கொண்டு போய்க் கொடுத்து தட்டச்சு செய்து, தட்டச்சு செய்யும் பெண்ணோடு அமர்ந்து பிழை திருத்தம் செய்து – என் எழுத்துக்கு அது எத்தனை … Read more

நான்தான் ஔரங்கசீப்…

இன்று (29 ஜூலை 2021) இரவு 9 மணிக்கு நான்தான் ஔரங்கசீப்… நாவலின் முதல் அத்தியாயம் bynge.in செயலியில் வெளியாகிறது. நாளை காலை ஏழு மணிக்கு இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறது. அதை அடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புதன்கிழமையும் மாலை நான்கு மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக வெளிவரும்.