அவதூறுக்கு எதிர்வினை (16): லக்ஷ்மி சரவணகுமார்

தன்னை அறிவாளி என்று நம்பிக்கொள்வது ஒருவிதமான மனநோய், இந்த மனநோய் முற்றத் துவங்கும்போதுதான் ஒருவன் மற்றவர்களை சிறுமைப்படுத்தத் துவங்குகிறான். இலக்கியம் யாருடைய அப்பன் வீட்டு சொத்துமல்ல, குடும்பத்திலும் தன்னைச் சார்ந்தவர்களிடமும் வெளிப்படுத்தும் அதிகார தொனியை விமர்சன அளவுகோலாக வைத்துக்கொண்டு மற்றவரை விமர்சிப்பது சாதிய அதிகாரத்தின் இன்னொரு வடிவம்தான். ஒருவரின் எழுத்தோடு முற்றாக உடன்படமாட்டேன் என்று சொல்ல எவருக்கும் உரிமையுண்டு, ஆனால் ஒருவரை திருடன் பிச்சைக்காரன் என்று சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த சாதிய மனோபாவத்தின் மனநோய். சாரு நிவேதிதாவைத்தானே அந்த … Read more

அவதூறுக்கு எதிர்வினை (15): லதா ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் சாரு குறித்த உங்கள் அவதூறுப் பதிவு கண்டனத்திற்குரியது. திரு. மிஷ்கின் அப்படிப் பேசியிருந்தால் அதுவும், திரு. சாருவை இலக்கியவாதியாக அடையாளங்காட்ட அவருடைய எழுத்துகள் இருக்கின்றன. உங்களுக்கு?

அவதூறுக்கு எதிர்வினை (14): அ. ராமசாமி

தனது வாசிப்பு எல்லைக்குள் சாரு நிவேதிதாவின் எழுத்துகளுக்கு இடமில்லை என்று சொல்வது இலக்கிய நேர்மை . ஆனால், தமிழ் இலக்கியப் பரப்பிலேயே அவருக்கும் அவரது எழுத்து முறைமைக்கும் இடமில்லை எனச் சொல்வது எந்தவிதத்திலும் நேர்மை சார்ந்ததல்ல. தான் நம்பும் கருத்தியலும் வெளிப்பாட்டு முறைமையும் மட்டுமே சரியானது; மற்றவையெல்லாம் விலக்கப்பட வேண்டியன என நினைக்கும் ஒதுக்கல் மனோபாவம். எதை எழுதுவது எனத் தெரிவுசெய்து முன்வைப்பதிலும், உலகக் கலை இலக்கியப்பரப்பில் – சினிமா, நாடகம், இலக்கியம் – அவருக்குக் கிடைத்த … Read more

அவதூறுக்கு எதிர்வினை (13): சுகன் பாரிஸ்

தமிழில் நம்காலத்தின் நுண்ணுணர்வுள்ள இலக்கிய ஆளுமை. பொதுபுத்திகளைச் சமரசம் செய்து எழுதவும் வாசக விருப்பத்தை கணித்து அளவை போட்டு இரண்டு கூடப்போட்டு தள்ளிவிடும் எழுத்துக் கோயம்பேடுகளுக்கு மத்தியில் தன்னுணர்வை நிறுவுவது கடினம். உங்களுக்குப் பிடித்த பிரான்ஸிற்கு வந்துவிடுங்கள் , உந்த நிலம் உங்கள் மன நிலைக்குச் சரிவராது ,என பலதடவை சொல்லிவிட்டேன். இன்னும் எத்தனை அவமானங்களை எதிர்கொள்ளப்போகிறீர்களோ தெரியாது.நாகூர் ஆண்டவர் உங்களுக்கு தற்போதைய நிலையில் மன அமைதியை அளிக்கட்டும். *** வினவு காரரைப்போல் இலக்கியத்தை மூடத்தனத்துடன் அணுகுவதற்கு … Read more

டியர் ரமேஷ்…

சென்ற பதிவில் ஒரே ஒரு விஷயம் எழுத மறந்து போனேன். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போகிற வருகிற நாதாரிக் கும்பலெல்லாம் நீங்களும் உங்கள் பழைய சகாவும் கொடுத்த காலச்சுவடு பேட்டியைக் குறிப்பிட்டு என் மீது காறி உமிழ்ந்து விட்டுப் போனார்கள். அவுங்க எழுதிக் குடுத்த நாவல்தானேயா ஸீரோ டிகிரி? என்று. முறைத்தால், நீ மறுத்தியா என்பார்கள். இப்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு பிரபலம் அப்படி என்னை முகநூலில் அவமதித்தது. இப்படியாகத்தான் நான் எழுதிய நாவலை … Read more

அவதூறுக்கு எதிர்வினை (12)

லக்ஷ்மி ரவணகுமார்: (அபிலாஷின் ‘மன்னிப்பு’க்கு எதிர்வினை) அந்த நபருக்காக நீங்க இவ்ளோ வக்காலத்து வேண்டியதில்லை நண்பா. அவர் பதிவுல இருந்த தொனி விமர்சனம் இல்ல சாருவின் மீதான வன்மம். அதை வெளிப்படுத்த உங்களப் பயன்படுத்திக்கிட்டார் அவ்ளோதான். அவர் நல்லவர் வல்லவர்னு நீங்க சர்டிஃபிகேட் குடுக்கறதெல்லாம் நகைச்சுவை. குனிந்து திருடும்போது பின்னால் குத்தப்படுவார்னு எழுதறாரு அந்த வரிகள அந்தப் பதிவுல கமெண்ட் போட்ற மூத்த எழுத்தாளர்கள் லாம் இதுக்குத்தான் குனிஞ்சு திருடக் கூடாதுன்னு சொல்றதுன்னு எழுதறாங்க. எவ்ளோ அயோக்கியத்தனம். … Read more