நம்முடைய ஆன்மீக சக்தியைப் பிறர் உறிஞ்சி எடுப்பதிலிருந்து தப்பிப்பதற்கான எளிய உபாயம் (ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் கதை)

டிசம்பர் பதினேழு பதினெட்டு தேதிகளில் விழா.  பதினாறாம் தேதி பத்தினியின் பிறந்த நாள் என்பதால் பதினாறாம் தேதியே கோயம்பத்தூர் கிளம்ப முடியாது.  நான் எந்த நாட்டில் எந்தப் பட்டணத்தில் இருந்தாலும் டிசம்பர் பதினாறிலிருந்து பதினெட்டு வரை ஊரில் – வீட்டில் – இருந்தாக வேண்டும்.  பதினெட்டு?  அது அடியேனின் பிறந்த நாள்.  ஆக, மூன்று தினங்களும் என்னைப் பொருத்தவரை வெளியுலகம் மூடப்பட்டது.  இப்படித்தான் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடந்து வருகிறது.    விழா அமைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது.  … Read more

கனவு, வைன், யோகா கதையில் விடுபட்டது

கனவு, வைன், யோகா என்ற நேற்றைய கதையில் விடுபட்ட சில பகுதிகளை இப்போது தருகிறேன்.  எனக்கு வரும் கனவுகளில் முக்கியமான இரண்டு கனவுகள் விடுபட்டு விட்டன.  ஒன்று, மனித நரகல் சம்பந்தப்பட்டது.  அதற்குக் காரணம், மெரீனா பீச்சும் என்னோடு பழகிய பெண்களும்.  நீங்களே கவனித்துப் பார்க்கலாம்.  ஓ, கவனித்துப் பார்க்கலாம் என்பதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டு உற்று கவனித்தீர்களானால் வெளிநாடுகளில் உங்களைப் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.  அதனால் கவனிக்காதது போல் கவனியுங்கள்.  பெண்கள் மட்டும்தான் கடல் … Read more

கனவு, வைன், யோகா…

(ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் சிறுகதை.  ஆட்டோஃபிக்‌ஷன் கதை என்றாலும் சில சம்பவங்கள் முழுக் கற்பனை.  யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல!)  இன்று சௌந்தர் ஃபோன் செய்து “யோகா பயிற்சிகள் செய்வதற்கு நேரம் இருக்கிறதா?  செய்கிறீர்களா?” என்று விசாரித்தார்.  அதற்கான பதிலைத்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். கொக்கரக்கோ தன்னுடைய ஒரு பிரச்சினையைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறான்.  இல்லை, அது அவனுக்குப் பிரச்சினை இல்லை.  அதை நான்தான் பிரச்சினையாக நினைக்கிறேன். அவன் உறங்கச் செல்வது அதிகாலை நான்கு மணிக்கு.  எழுந்து கொள்வது … Read more

த அவ்ட்ஸைடர் 18: சொமோஸா ஸ்டேடியத்தில் சொமோஸா சிலையை சொமோஸா திறந்து வைக்கிறார்!!!

உங்களுக்குத் தெரிந்த சர்வாதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.  வாழும் போது புகழின் உச்சியில் இருப்பார்கள்.  ஆனால் கடைசி காலத்தில் தெருநாய் போல் ஆகி விடுவார்கள்.  சிலர் ஹிட்லரைப் போல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.  இல்லாவிட்டால், காக்காய் குருவி போல் சுட்டுக் கொல்லப்படுவார்கள். பினோசெத்தின் வீழ்ச்சி மிகவும் கேவலமாக இருந்தது.  அவர் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களின் காரணமாக அவருக்குப் பின்னால் வந்த அரசினால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதோடு அவர் ராணுவத்தின் முப்படைத் … Read more

த அவ்ட்ஸைடர்: சில எதிர்வினைகள்

சாரு,  தருமபுரியிலிருந்து ஸ்ரீதர். “இன்னும் சத்தமாகக் குரை” பகுதியைப் படித்தேன். உங்களது ஆதங்கம் நியாயமானது. அதற்கான பதில் – படிக்கிறோம். எப்போதும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவுரங்ஸேப்  போல ஒரு செறிவைக் கொண்டது சீலேயின் சரித்திரம். நீங்கள் சொன்னதுபோல் நமக்கான வரலாறு அதிகார மையங்களால் தந்திரமாகக் கட்டமை க்கப்பட்டது. நிதர்சனமான உண்மையான சரித்திரங்கள் சமூகங்களுக்கு என்றுமே காட்டப்படுவதில்லை. பெருந்திரளான மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான மனச்சான்றுடைய எழுத்தாளர்கள், கலைஞர்களே அவை குறித்து பதிவாக்குகின்றனர். அவையும் … Read more

த அவ்ட்ஸைடர் – 17 (Más fuerte Perra – இன்னும் சத்தமாகக் குரை பெண்நாயே!)

உடலை ஒடுக்குதல் என்பது சர்வாதிகாரத்தின் பண்புகளில் ஒன்று. அதனால்தான் ஹிட்லர் ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரையும் வதைமுகாமுக்கு அனுப்பினார்.  அதைப் போலவேதான் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்களும் பிஸாகுவாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.  இது கிட்டத்தட்ட ரஷ்யாவில் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சைபீரியாவின் பனிப்பாலைகளுக்கு அனுப்பியதற்கு நிகர்.    லியனார்தோ ஃபெர்னாந்தஸ் என்பவர் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி ஆய்வு செய்தவர்.  இபான்யேஸ் தெல் காம்ப்போவின் (Ibáñez del Campo) ஆட்சியில் – அதாவது, 1920களின் இறுதியில் – ஓரினச் சேர்க்கையாளர்கள் … Read more