அபிலாஷுக்கு எதிர்வினை – 2

சில விஷயங்களை எழுத மறந்து போனேன். என்னுடைய எழுபது வயதில் இந்த விஷ்ணுபுரம் விருதை முன்வைத்துத்தான் இத்தனை பேர் என் எழுத்தின் உள்ளே சென்று தங்கள் அனுபவத்தை முன்வைத்த சம்பவம் நடந்தது. சுமார் ஐம்பது கட்டுரைகள் வந்திருக்கும் இல்லையா? அதில் போகன் சங்கர் என்ன எழுதினார்? அவர் என்ன தமிழருவி மணியன் மாதிரி பேச்சாளரா? நாங்கள் யாருமே சரியாகப் பேசவில்லை. ஆனால் அதையும் மீறி கடந்த ஒரு மாதமாக ஜெயமோகனின் தளத்தில் எத்தனை எத்தனை கட்டுரைகள் என் … Read more

அபிலாஷுக்கு ஓர் எதிர்வினை

அபிலாஷின் கல்யாண மாலை ஒழிக கட்டுரையின் பெரும்பகுதியோடு எனக்கு உடன்பாடுதான். ஆனால் நான் கலந்து கொண்ட எந்த நிகழ்ச்சியும் அடிதடி இல்லாமல் – எனக்குக் கொலை மிரட்டல் விடப்படாமல் நடந்ததே இல்லை – விஷ்ணுபுரம் விழா மட்டுமே விதிவிலக்கு. விவாதங்களும் உரைகளும் இன்னும் செறிவாக இருந்திருக்கலாம்தான். ஆனால் அதை சாக்காக வைத்து எனக்குக் கொலை மிரட்டல் விடுவதும் நடந்து கொண்டேதானே இருந்தன. இப்போது மனுஷின் கவிதை வெளியீட்டு விழாவில் பேசுகிறேன். பவுன்ஸர்களோடுதான் செல்ல வேண்டும். அந்த பயம் … Read more

கல்யாண மாலை ஒழிக! : அபிலாஷ் சந்திரன்

விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வுகளின் அரசியலின்மை பற்றி தோழர் புலியூர் சொன்னதை குளச்சல் யூசுப் திசைதிருப்பி அங்கு மதுவும், போதையும், அரைகுறை ஆடைகள், ஆரவாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என சிலர் வருத்தப்படுவதாக ஒரு பதிவு எழுதியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன், திரும்பவும் சொல்கிறேன் – பழைய சிறுபத்திரிகை இலக்கிய அரங்குகள் குடித்துக்கொண்டு வேட்டியை அவிழ்த்துப் போட்டு பரஸ்பரம் அடித்தும் கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்கள் எனும் மனப்பதிவு சிலருக்கு உண்டு. என் அனுபவத்தில் அப்படி … Read more

ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்: சில செயல் திட்டங்கள்

முன்பே எழுதியிருக்கிறேன், எனக்குப் பதிப்பகம் தொடங்குவது பிடிக்காது என்று. என் புத்தகங்களை நானே பதிப்பித்த அனுபவம் ஒரு காரணம்.  என் நண்பர்கள் பதிப்பகம் ஆரம்பித்தாலும் பிடிக்காது, லாபம் வராது என்பதால்.  ஆனாலும் என் நண்பர்கள் ஆரம்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  முதலில் ஸீரோ டிகிரி.  இப்போது ஆட்டோநேரட்டிவ்.  ஆட்டோநேரட்டிவை இயக்கும் நண்பர்கள் யாவரும் மாதம் இருபதாயிரம் ரூபாயிலிருந்து அறுபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்க இளைஞர்கள்.  ஒருத்தர் சொந்தமாக ஒரு பிஸினஸ் ஆரம்பித்திருக்கிறார்.  இன்னும் சம்பளம் … Read more

மனுஷ் பாதிப்பில் சில கவிதைத் தலைப்புகள்!

ஹமீது என்னிடம் நட்பில் இருந்த போது என் புத்தகங்களுக்கு அவர்தான் தலைப்பு வைப்பார். காமரூப கதைகள் அவர் வைத்த தலைப்புதான். காமரூபக் கதைகள் என்று அவர் வைத்த தலைப்பில் நடுவில் உள்ள க்-ஐ நான் நீக்கினேன். அவ்வளவுதான். இலக்கணப்படி க் வர வேண்டும். ஆனால் நான் அவ்வப்போது இலக்கணத்தை மீறுவேன். இப்போது ஹமீதின் பதின்மூன்று கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளையும் பார்த்தேன். எல்லா தலைப்புகளையும் நான் சமீப காலத்தில் நேர் வாழ்வில் புழங்கியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி என்னுடைய … Read more