தயிர்வடை சென்ஸிபிலிட்டி

இப்போது நான் எழுதப் போவது ஒரு கணித விளையாட்டைப் போன்றது.  சென்னையில் உள்ள பிஹெச்.டி. ஆய்வு செய்யும் மாணவர்களை எடுத்துக்கொண்டால், அதில் தலித் இலக்கியத்தை ஆய்வு செய்பவர்கள் பத்து பேர் என்று வைத்துக் கொள்வோம்.  அதில் ஒன்பது பேர் பிராமணராக இருப்பார்கள்.  அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.  இது போன்ற ஒரு எண் ஆராய்ச்சி விளையாட்டைத்தான் இப்போது எழுதப் போகிறேன்.  இது நான் கண்ட உண்மை.  நான் கண்ட எதார்த்தம்.  நான் கண்ட அந்த எதார்த்தம் … Read more

உலகத் திரைப்படம் எடுப்பது எப்படி?

அன்புள்ள சாரு, நான் நந்தகுமார்.  உங்களின் சமீபத்திய வாசகன்.  ஜூன் 30 அன்று திருவண்ணாமலையில் நடந்த உலக சினிமா பயிலரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றவன்.  சுமார் ஒன்பது மணி நேரம் நீங்கள் நிகழ்த்திய உரை, நீங்கள் காண்பித்த திரைப்படங்கள் எல்லாமுமே எனக்குப் பெரும் திறப்பை அளித்தன.  அதற்கு நான் செலுத்திய கட்டணம் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் எனக்கு ஒரு குறை உண்டு.  அதைச் சொன்னால் நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்பதால் … Read more

வனத்தில் சில இரவுகள்

திருவண்ணாமலையில் ஜூன் முப்பதாம் தேதி உலக சினிமா பயிலரங்கை முடித்துவிட்டு மறுநாள் நானும் சீனியும் ராஜா வெங்கடேஷும் அந்த வனத்தை நோக்கிக் கிளம்பினோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அந்த அடர்ந்த வனம். பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதை அரசாங்கமே சுற்றுலாப் பயணிகளின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சீனியும் ராஜாவும் மாற்றி மாற்றி கார் ஓட்டினார்கள். வழியில் கறி விருந்துக் கடைகள் நிறைய இருந்தன. உணவு உலகத் தரம். இங்கே சென்னையில் ஈரல் வறுவல் என்று கேட்டால் … Read more

அடுத்த ஆட்டம் ஆரம்பம்…

இவரைப் பற்றி யாரும் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.  இவரைப் பற்றி எந்த விமர்சகரும் விமர்சித்தோ பாராட்டியோ எழுதியதில்லை.  இவரது நூல்கள் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அமெரிக்க வாசகர்கள் இவர் பெயரை அறிந்திருக்க மாட்டார்கள்.  ஜார்ஜ் பத்தாயின் (Georges Bataille) நண்பர்.  மிஷல் ஃபூக்கோ (Michel Foucault) இவரைப் பற்றிப் பெரிதும் சிலாகித்திருக்கிறார்.  நீட்ஷே (Nietzsche), மார்க்கி தெ ஸாத் (Marquis de Sade) இருவரும் இவரது எழுத்தைப் பெரிதும் பாதித்திருக்கிறார்கள்.  ஆரம்ப காலத்தில் விட்ஜென்ஸ்டைன் (Wittgenstein), ஹெடேக்கர் … Read more

மகிழ்ச்சிக்கான திறப்பு உங்கள் பாக்கெட்டிலேயே இருக்கிறது!

இப்போது நான் எழுதப் போகும் இந்தக் கட்டுரை பணத்துக்கும் மனிதனுக்கும், பெண்ணுக்கும் மனிதனுக்குமான உறவு பற்றிய என் மேனிஃபெஸ்டோ என்று சொல்ல்லாம்.  பணம் பற்றி இதுபோல் நான் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதியிருந்த போதும், இந்தக் கட்டுரை அவற்றின் சாரம் என்று கொள்ளவும்.   ”காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறரை வரை பயிலரங்கில் கலந்து கொண்ட இருநூறு பேரில் இரண்டே இரண்டு பேர் தவிர வேறு ஒருவர் கூட இடையில் எழுந்து போகவில்லை.  நம்ப முடியாத அதிசயம்.” சென்ற … Read more

ஜூ 30 பயிலரங்கம்: சில குறிப்புகள்

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது.  இதற்குக் காரணமாக இருந்தவர்கள் பலர்.  விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த அரங்கசாமி, எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி சேர்மன் கருணாநிதி, பவா செல்லத்துரை, இந்தப் பயிலரங்க யோசனையை எனக்குள் விதைத்த மதிவாணன், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கரன், கல்லூரி நிர்வாகி சக்தி கிருஷ்ணன், என்னுடைய நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரன், மற்றும் பண உதவி செய்த நண்பர்கள்.  இவர்கள் … Read more