தனியாக…

நான் நடக்கிறேன்காற்றில் என் நிழல் மட்டும் தொடர்கிறது நான் உறங்குகிறேன்இரவின் மௌனம் என்னை மூடுகிறது நான் உண்ணுகிறேன்தட்டில் நிறைகிறது வெறுமையின் சுவை. நான் மைதுனம் செய்கிறேன்என் மனம் மட்டும் என்னோடு புணர்கிறது. நான் எழுதுகிறேன்என் எழுத்து எனக்குள்ளேயே சுழல்கிறது நான் வாசிக்கிறேன்புத்தகத்தின் பக்கங்கள் வாசிப்பின் தனிமைகூட்டுகின்றன நான் இசை கேட்கிறேன்ஒலியில் மூழ்கி மறைகிறேன் நான் தியானத்தில் ஆழ்கிறேன்என் மனம் வெளியாகி என்னை விட்டுநீங்குகிறது நான் சிரிக்கிறேன்என் பிறழ்வு கண்ணாடியில் சிதறுகிறது நான் அழுகிறேன்என் கண்ணீர் அபத்த உலகில் … Read more

பிறந்த நாளிலிருந்து மூன்றாவது நாள்

3 பிறந்தநாளைச் சொன்னால் என்ன?சொல்லாவிட்டால் என்ன?அது ஒரு வெறுமையான நாள்,ஏன் அதைப் பிடித்துத் தொங்குகிறாய்?நீயும் நானும் ஒரு மதுக்கடையில்வைன் குடித்தபடி இது பற்றிப்பேசலாம்ஆனால் இந்தப் பிறந்தநாள்ஒரு பயனற்ற காகிதத்தில் எழுதப்பட்டமற்றொரு எண்ணிக்கை. 1நான் ஒரு தீர்க்கதரிசி,மதங்களை நம்பாதவன்.அதனால் புது மதத்தைஉருவாக்கவில்லை,என் தரிசனங்கள் சிலரின் பாதையைமாற்றினஅதனால் என் பிறந்தநாள் ஒருசிறிய வெற்றிஒரு குடிகாரனின்கடைசிச் சிரிப்பு மாதிரி. 2உன் பிறந்த நாளைநான் கொண்டாடுவேன்,ஏனென்றால்,எனக்கு நீஒரு பாழடைந்த பட்டணத்தில்எரியும்கடைசி தீபத்தைப் போல.

ஆறு குறுங்கவிதைகளும் மற்றொரு கவிதையும்

1. முதல் முத்தம் முதல் முத்தம் தந்தபோதுஅச்சம் பரவசம் கொன்றதுமுதல் முத்தம் கிடைத்தபோதுஉணர்வு மரத்து நின்றது 2. பயணம் நீ, நான், நட்சத்திரம், மரம், மலை, கடல், பூமி, கருந்துளை, புழு, பூச்சி, நாய், பூனை, சிங்கம், புலி, கரடி, அரசியல்வாதி, கோடீஸ்வரன், பிச்சைக்காரன், ரேப்பிஸ்ட், ஞானி, அஞ்ஞானி – எல்லோரும் பூஜ்யத்தை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம் 3. சுழற்சி சாலை நடுவே பெருச்சாளிகொத்தித் தின்னும் காகம்பார்த்துச் செல்லும் மனிதர்கள் 4. இரு பூனைகள் ஒரு பூனை புறாவிடம்பேசிக்கொண்டிருக்கிறதுஒரு … Read more

நவீன ராம காதை

1.கடவுள் வாழ்த்து ஒருநாளும் ஒருபோதும்சுய இரக்கப் பிரதிகள்பாடியதில்லைஇன்றும் அப்படியே ஆகசீதையின் நாயகனேசிவதனுவை வளைத்தவனேஅயோத்தியின் அருள் வடிவேநீயே எனக்குத் துணை நிற்பாய்! 2. கழிப்பறை சுத்திகரிப்புப் பணி இருபத்தைந்து ஆண்டுகள்அரசனாய் மிதந்தேன்பின்னே புரிந்ததுபெண்ணின் வியர்வையில்உயிர் திளைக்கக் கூடாது பிரித்தேன் உழைப்பைஉனக்கு இருபத்தைந்துஎனக்கு எழுபத்தைந்துஆயினும்எழுபத்தைந்தில்கழிப்பறை சுத்தம் சேரவில்லைஉழைப்பில் ஏற்றத்தாழ்வாஎன ஆவேசம் கொள்ளாதீர் வறுமையின் நாட்களில்நாப்கினுக்குக் காசில்லாமல்மனையாளின் தூரத்துணியும்துவைத்திருக்கிறேன் ஒருநாள் மனையாள் ஊரிலில்லைகழிப்பறை வேலைதலையில் வீழ்ந்ததுஇவ்வூரில்இரட்டிப்பு ஊதியத்திலும்கழிப்பறை வேலைக்குஆட்கள் கிடையாது மோகினிக்குட்டி சொன்னாள்ஹார்ப்பிக் கொட்டு, ஊற விடு,தேய், கழுவு…முடிந்தது. ப்பூ, இவ்வளவுதானா? … Read more

நான், நிலா மற்றும் ஒரு பின்நவீனத்துவக் காதல் நாடகம்

எதேச்சையாய் சந்தித்த தோழி, என்ன செய்கிறாய் என்றாள். காதல் செய்கிறேன், காதல் கவிதைகள் எழுதுகிறேன் என்றேன் சற்றே நாடகத்தனமாக கண்களில் பளபளப்புடன். எப்போதும் நீ இப்படித்தான் இத்தனை வயதிலும், இன்னும் க்ளிஷேக்களில் விளையாடுகிறாய். ’எப்போதும் இப்படித்தான் நான் என்ன சொன்னாலும் நீ மட்டுமல்ல, யாரும் நம்புவதில்லை அதனாலே இப்போது சற்று தயக்கத்தோடே சொல்கிறேன்… கொஞ்ச காலம் நான் நிலவுடன் டேட்டிங் செய்தேன்.’ அவள் கண்கள் விரிந்தன ’நிலவு! இது என்ன உன் புதிய hipster கவிதையா?’ ’இல்லை, … Read more