தேர்தல் களம் – அடியேனின் கருத்து

நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது ‘அதிருப்தி அலை’ இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட … Read more

காதலும் கடந்து போகும்…  (பாலாவின் இயக்கத்தில்)

எனக்கு வரும் கனவுகள் சற்று வினோதமானவை.  ஸீரோ டிகிரியில் உள்ள கவிதைகள் பலவும் கனவில் வந்தவைதான்.  காலையில் மறந்து விடும் என்பதால் கனவு முடிந்ததுமே எழுந்து எழுதி விடுவேன்.  இதற்காகவே அப்போதெல்லாம் காகிதமும் பேனாவும் பக்கத்திலேயே இருக்கும்.  சமயங்களில் க்ரைம் கதைகள் தோன்றும்.  விலாவாரியாக வரும்.  சுபம் வரை நீளமாகப் போகும்.  காலையில் எழுந்து பார்த்தால் புகைமூட்டமாகத் தெரியும்.  காட்சிகளும் கதையும் மறந்து போயிருக்கும்.  அந்தக் கதைகளை மட்டும் அப்போதே எழுந்து எழுதி விட்டால் நானும் ராஜேஷ் … Read more

அன்பும் வெறுப்பும்…

அன்புள்ள சாரு, உங்களுக்கு இது என் முதல் கடிதம். உங்கள் ‘நிலவு தேயாத தேசம்’ தொடர்ந்து படித்து வருகிறேன். எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து,  தேவையான எல்லா விடயங்களையும் தொட்டு, பின் ஆரம்பப்புள்ளியில்  முடிக்கும் உங்கள் எழுத்து வியக்க வைக்கிறது. வெறும் இடங்களின் குறிப்பு மட்டும் கொடுக்காது, அதன் முழு வரலாற்றையும் சாறு பிழிந்து கொடுக்கும் உங்கள் உழைப்பு என்னை வெகு விரைவாக உங்கள் எழுத்துக்கு அடிமை ஆக்கி விட்டது. உங்கள் எல்லா புத்தகங்களையும் படிக்க ஆவல் … Read more

காதலும் கடந்து போகும்… Sí Señor…

அன்புள்ள  சாரு, “ஏ பங்காளி…”  எனும்  theme பாடல், Amores Perros-ல் வரும்  “Si Senor” பாடல்  வடிவில்  இருக்கிறது  பாருங்கள்.  கொஞ்சம் டெம்போ  மட்டும்  குறைவு.  மற்றபடி  அந்த  வெறிபிடித்த  நாயின்  அதே  குரல்… “ஏ பங்காளி…” “Si Senor” பிரபு   சந்தோஷ் நாராயணனிடம் ஒளிவு மறைவு இல்லை.  தான் எடுப்பதையும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்.  பழக்கத்திலும் eccentricity-யிலும் சந்தோஷ் நாராயணனை கிட்டத்தட்ட சந்திர பாபுவுடன் ஒப்பிடலாம்.   சினிமாவில் இப்படிப்பட்ட கலைஞர்களின் வரவு … Read more

காதலும் கடந்து போகும்

சினிமா ரசனையைப் பொறுத்தவரை பிரபு காளிதாஸுக்கும் எனக்கும் நன்றாக ஒத்துப் போகிறது.  நேற்று ’காதலும் கடந்து போகும்’ பார்த்தேன்.  இது பற்றி பிரபு எழுதியிருப்பது.  “மரக்கன்றுகள் முறையான கைகளில் சிக்கினால் எவ்வளவு நல்லதோ அவ்வளவு அருமையாக சினிமா இளைஞர்கள் கையில் சிக்கியுள்ளது. மிகவும் சந்தோஷம். பின்னணி இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் எல்லாமே அற்புதம். விஜய் சேதுபதி படுபயங்கரம். அவர் உலக அரங்கை வெகுவிரைவில் நிச்சயம் தொடுவார். சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இதில் நன்றாக நடித்துள்ளார். … Read more

நிலவு தேயாத தேசம் – 21

மீண்டும் சொல்கிறேன்.  அந்திமழை இணைய இதழில் நான் எழுதி வரும் துருக்கி பயணத் தொடரை நூலாக வந்ததும் படித்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள்.  தொடரில் இப்போது வரும் புகைப்படங்களும் காணொளிகளும் புத்தகத்தில் இடம்  பெறாது.  இப்போதே படித்து விடுவது நல்லது. எஃபெசூஸில் மேலும் சில சுவாரசியங்களைப் பார்த்தேன்.  நகரில் பிராத்தல் என்று ஒரு இடம் இருக்கிறது.  விபச்சார விடுதி.   அதன் நுழைவாயிலில் ஒரு காலடித் தடம் காணப்படுகிறது.  அந்தக் காலடி அளவுக்குக் குறைந்த அளவுள்ள பாதத்தைக் கொண்டவர்கள் … Read more