காவியத் தலைவன் : தமிழ் ஸ்டுடியோஸ் அருண் விமர்சனம்

காவியத் தலைவனைப் போன்ற மொக்கையான, அருவருப்பான படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  அதனால்தான் பத்தே நிமிடத்தில் திரையரங்கத்திலிருந்து ஓடி வந்தேன்.  சில ஸ்கூல் பையன்கள், “அங்கிள், நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், படிச்சுப் பாருங்களேன்” என்று சொல்லி ஏதோ ஒரு கருமாந்திரத்தை உங்களிடம் காண்பித்த அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறேன்.  இந்த அனுபவத்தைப் பெறாத ஒரு ஆள் கூட இருக்க மாட்டார்.  அந்தப் பொடியன் எழுதி உங்களிடம் கொடுக்கும் அந்தக் கருமாந்திரக் கவிதை மாதிரிதான் இருந்தது … Read more

ஒரு லட்சம் பிரதிகள்

அன்புள்ள சாரு, புதிய எக்ஸைலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அதற்கான முன்பதிவுத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பிருப்பதாக, உங்கள் பதிவுமூலமாக ஹரன் பிரசன்னாவின் வார்த்தைகளில் அறிந்தது சந்தோஷம் தருகிறது. சென்னை தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலும் நாவல் நன்றாக விற்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் ஊடகங்களில் நல்ல பப்ளிசிட்டி இந்தமுறை தரப்பட்டிருக்கிறது. விற்பனை என்பது பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம். பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள்கூட 1000 காப்பி விற்பதே அபூர்வமாக இருக்கும் தமிழ் வாசகசூழல் பற்றி அடிக்கடி கூறிவந்திருக்கிறீர்கள். விகடனில் வெளிவந்த உங்கள் ’மனம் … Read more

புதிய எக்ஸைல்: முன்பதிவுத் திட்டம்: நன்றி

புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் நாளை காலையுடன் முடிவுக்கு வரும் என்று கிழக்கு பிரஸன்னா சொன்னார்.  தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்பதிவு செய்திருக்கிறார்கள்.  இதற்காக உதவி செய்த தினமலர், தி இந்து, அந்திமழை, புதிய தலைமுறை பத்திரிகை நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குறிப்பாக தினமலர்.  அதன் மின்னிதழில் முன்பதிவு செய்தி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.  லட்சக் கணக்கான பேர் வாசிக்கும் தினசரிகளிலும் சஞ்சிகைகளிலும்  இலக்கிய நூல்களுக்கு இப்படிப்பட்ட செய்திகளும் … Read more

ஊடகங்களில் புதிய எக்ஸைல்

இனிமேல் யாரும் புதிய புத்தகங்களுக்கு, இலக்கியப் படைப்புகளுக்கு சரியான விளம்பரம் கொடுப்பதில்லை என்று புகார் சொல்லவே கூடாது.  புதிய எக்ஸைலுக்குக் கிடைத்த விளம்பரம் அளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் வேறு எந்த நூலுக்கும் ஊடகங்களில் இந்த அளவுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டதில்லை.  தினமலரில் (மின்னிதழ்) இன்னமும் விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கிறது.  பல லட்சம் பேர் படிக்கும் தினசரி.  தி இந்து (தமிழ்) நாளிதழில் சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை அரைப் பக்கத்துக்கு புதிய எக்ஸைலில் இருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டு, … Read more

புதிய எக்ஸைல் : A Visual Treat : நிர்மல்

நான் ஏற்கனவே புதிய எக்ஸைல் நாவலைப் படித்து விட்டேன். சாரு எனக்குக் கொடுத்த பெரும் அன்பு அது.  அதைப் படித்தால் ஒரு க்ளாசிக் திரைப்படத்தை பார்த்த உணர்வு வரும்.  அப்படியென்றால் க்ளாசிக்கைப்  பார்க்கும் அளவுக்குப் பொறுமையும் வேண்டும். ஏன் திரைப்படம் என்கிறேன் என்பதைச் சொல்லி விடுகிறேன். இந்த நாவலில் முதலில் வருவது கேசவன் எனும் யானையின் கதை. இந்தக் கதை ஏன் முதலில் வருகிறது?  இது நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகள் என்ன? படங்களில் வசனம் மூலம் உனர்வுகளைச் சொன்னால் … Read more