மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா: நேசமித்ரன்

மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா இதுவரை எந்த சாதியையும் உயர்த்திப் பிடித்ததாக தெரியவில்லை தமிழ் எழுத்துப் புலத்திற்கு உலக இசையை அறிமுகப் படுத்திய முதல் எழுத்தாளன் 3.காதலுக்கும் காமத்திற்கும் ஆன இடைவெளியை காலம் கடந்து கொண்டே இருக்கிறது.அதன் மானக்கேடான பக்கங்களை ( per version) தன் மொழித்திறத்தால் கடந்த ஒற்றை மனிதன் தான் நம்பிய உத்தியை நவீனத்துவத்தின் கூறுகளை இன்றும் அயல்நிலத்திலிருந்தும் பயின்று பார்க்கும் எழுத்தாளன் சிற்றிதழ் மரபு துயரார்ந்த வாழின் பாகங்களையே பேசிய … Read more

சாரு என்னும் சகாப்தம்: ஆர். அபிலாஷ்

முன்னோடிகளின் பாதையில் நடைபோடுவது சற்று சுலபம். தமிழில் ஏற்கனவே உள்ள செண்டிமெண்டுகள், இங்கு வெற்றி பெற்றுள்ள வடிவங்கள், உருவகங்களை பயன்படுத்தி வாசகரை சுரண்டுவதும் ஓரளவுக்கு எழுத்து கைவந்தவர்களுக்கு சுலபமே. ஆனால் இங்குள்ள கதைகூறல் மரபை முழுக்க உடைத்து விட முயல்வது, உரைநடை-புனைவு எனும் இருமையை அழிப்பது, அதன் வழி சுய அனுபவத்தை சொல்லுகிறவனும் ஒரு கற்பனைப் பாத்திரமே என நிறுவுவது, எதிர்க்கதை எனும் புதிய பள்ளியை இங்கு உருவாக்குவது, ஒரு புது அழகியலுக்கு. களம் அமைப்பது, அதற்கான … Read more

இன்று சாருவுக்குப் பிறந்தநாள்: மனுஷ்ய புத்திரன்

இன்று சாருவுக்கு பிறந்த நாள் என்று காலையில் கண் விழிக்கும்போதே நினைவுக்கு வந்தது. எழுத்தாளர்களுக்கிடையே வரும் சச்சரவுகள், பதிப்பாளர்- எழுத்தாளர்களுக்கிடையே வரும் கசப்புகளை எல்லாம் தாண்டி நட்பின், அன்பின் உயரிய கண்ணியத்தை எப்போதும் என்னை உணரச் செய்தவர் சாரு. அவரை புண்படுத்தக்கூடிய பல வாசகங்களை பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் அதைப்பொருட்படுத்தியதில்லை. எழுத்திலோ பேச்சிலோ எந்தக் கசப்பையும் என் மேல் வெளிபடுத்தியதில்லை. உயிர்மையைவிட்டு எவ்வளவோ விலகிச் சென்றபிறகும்கூட உயிர்மை அவர் எழுத்து வாழ்க்கைக்கு அளித்த பங்களிப்பை … Read more