கார்ல் மார்க்ஸ் (2)

ஏதோ காரணத்தால் சென்ற கட்டுரையின் கடைசிப் பத்தி காணாமல் போய் விட்டது.  அதிலும் இந்தக் கட்டுரைக்கு மாற்றுப் பிரதியை சேமித்து வைத்துக் கொள்ளாமல் அப்படியே சாருஆன்லைனில் தட்டச்சு செய்து பதிவேற்றி விட்டேன்.  இப்போது என் ஞாபகத்திலிருந்து. நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி முரடனாக இருந்தது வெறும் முரட்டுத்தனத்தினால் மட்டும் அல்ல.  நான் சார்ந்திருத்த தத்துவத்தின் அடிப்படையாக இருந்த வெறுப்பினாலும்தான்.  நாம் எதை சார்ந்திருக்கிறோமோ அதன் நிழல் நம் மீது படாதா?   இப்போது என்னால் யாரையும் எதையும் … Read more

கார்ல் மார்க்ஸ்

ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டும் போது வருத்தப்பட மாட்டேன்.  அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவேன்.  ஆனால் என் மதிப்புக்குரிய சில எழுத்தாளர்கள் என் நோக்கத்தைச் சந்தேகித்துக் கேவலமாகப் பேசும்போது அவர்களுடனான தொடர்பை அறுத்துக் கொள்வது என் வழக்கம்.  அதற்காக அவர்களுடைய எழுத்தை மதிப்பிடுவதில் இந்தப் பிரச்சினையெல்லாம் குறுக்கிடாது.  அது வேறு; நட்பு வேறு.  பல ஆண்டுகளுக்கு முன்பு – 2003 என்று நினைக்கிறேன் – திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம்.  பாரிஸில் வசிக்கும் கலாமோகனின் சிறுகதைத் தொகுப்பு பற்றி … Read more

ஜனவரி 9 வெளியீட்டு விழா குறித்து…

ஜனவரி 9-ஆம் தேதி ஒரு பெரிய அரங்கத்தில் இடம் கிடைத்திருக்கிறது.  பழுப்பு நிறப் பக்கங்கள் முதல் தொகுதியின் வெளியீட்டு விழாவை அங்கே வைக்கலாமா?  அது சனிக்கிழமை என்பதால் பலரும் வந்து கலந்து கொள்வது சுலபம்.  பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி – 1 க.நா.சு.வோடு முடிவடைகிறது.  ஆதவன், தி.ஜா., வண்ணநிலவன் போன்றோர் இரண்டாம் பாகத்தில்.  தனிப்பட்ட முறையில் இப்படி பிரம்மாண்டமான முறையில் வெளியீட்டு விழா நடத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை.  இன்னும் இரண்டு வாரத்தில் அரங்கத்துக்கு 45 … Read more

அதிகாலையில் ஓர் நேர்காணல்…

பின்வரும் நேர்காணல் சூர்ய கதிர் பத்திரிகையில் வெளிவந்தது.  இந்த நேர்காணல் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும்.  யாராவது ஒருவர், “நான் 1953-இல் பிறக்கிறேன்.  பிறகு அவசரகால கட்டத்தில் தலைமறைவாகிறேன்…” என்று கடந்த காலத்தை நிகழ்கால இலக்கணத்தில் பேசினால் அவர் ஒரு பிரமுகர் (வி.ஐ.பி.) என்று அறிந்து கொள்ளுங்கள்.  எனக்குத் தெரிந்து அப்படி கடந்த காலத்தை நிகழ்காலத்தில் பேசிய ஒரே இலக்கியவாதி தமிழவன் என்று நினைக்கிறேன்.  25 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு நேர்காணல் படித்தேன்.  மற்றபடி … Read more