கூலி இல்லாத வேலை (3)

நீங்கள் எழுதியிருந்த கூலி இல்லாமல் செய்யும் வேலை படித்தேன்.  நேற்றைய விஜய் டிவியில் ஒளிபரப்பிய ’நடந்தது என்ன?’ என்ற நிகழ்ச்சியில் பா.விஜய் நா.முத்துக்குமாரை பற்றிப் பேசும் போது, அவரது மறைவுக்குக் காரணம் மன அழுத்தம் எனவும், மன அழுத்தத்திற்குக் காரணம் அவருடைய உழைப்புக்கான கூலி சரியாக தரப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்… இது ஒரு சாபமோ? சந்திரசேகரன் ”வெகுசன பத்திரிகைகளில் என்னுடைய கவிதை ரசிகர்கள் யாராவது இருந்து வருடத்திற்கு ஒரு முறை அதில் என்னுடைய கவிதையை வரவழைக்க பல்வேறு … Read more

கூலி இல்லாமல் செய்யும் வேலை (2)

ஒரு பிழை நேர்ந்து விட்டது.  விகடன் அனுப்பிய 2000 ரூபாய் காந்தி கணக்கில் சேர்ந்து விட்டது.  அதாவது, என்னுடைய பழைய சின்மயா நகர் வங்கிக் கணக்கு.  அது அவந்திகாவின் பெயரில் இருப்பது.  தவறுக்கு உண்மையிலேயே வருந்துகிறேன்.  யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல.   இலக்கியப் பத்திரிகை என்றால் பணம் கொடுக்க மாட்டார்களோ என்ற என் அச்சமும், பணம் வரவில்லையே என்ற கவலையோடு சேர்ந்து கொண்டு  விட்டது.  இதை நீங்கள் குழந்தைப் பிராயத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்ட … Read more

கூலி இல்லாமல் செய்யும் வேலை

இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்களை நான் பத்திரிகைகளில் எழுத முடியாது.  எனவே இங்கே எழுதுகிறேன். நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்கலாம்.  இந்த இணைய தளத்தில் சமீப காலமாக என்னுடைய அக்கவுண்ட் நம்பரை நான் கொடுப்பதில்லை.  யாரிடமும் பணமும் கேட்பதில்லை.  காரணங்கள் இரண்டு.  ஒன்று, அனாவசியமாக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற அவப்பெயர் ஏற்படுகிறது; இரண்டாவது, யாரும் பணமும் அனுப்புவதில்லை.  இந்த இரண்டாவது காரணம்தான் பிரதானமான காரணம்.  யாராவது ஒருவர் ஐநூறு ரூபாயோ நூறு ரூபாயோ அனுப்புவார்.  எனக்கு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 2)

புயலிலே ஒரு தோணி நாவல் முழுவதும் கடவுள், மதம், தர்மம், மொழி, நிலம், தாய்மை, சாதி, கலாச்சாரம், மரபு, பண்பாடு, தேசம் என்று எல்லாவற்றையும் பகடி செய்கிறார். அவருடைய பகடியிலிருந்து எதுவுமே தப்பவில்லை. ஒருவேளை இது கூட தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிங்காரம் பற்றிப் பேசாததற்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சிங்காரத்தை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், அவர் எழுத்து வெறும் பகடி மட்டும் அல்ல; Raymond Federmen-ன் மொழியில் சொல்வதானால், gimmicks, playfulness, narcissism, … Read more

ஓர் அற்புதத் தருணம்

பிரபு காளிதாஸ் என்னை எடுத்த புகைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இது. சிற்பி வித்யாஷங்கர் அவர்களின் இல்லத்தில் எடுத்தது. சிப்பிப்பாறை இன நாய். பெயர் மறந்து விட்டேன். பொதுவாக நாயைக் கட்டிப் போடக் கூடாது. ஆனால் ஸ்தபதி 80 வயது முதியவர் என்பதால் அதைக் கொஞ்சம் கட்டிப் போட்டிருக்கிறார்.   அவருடைய செல்லக் குட்டி எனக்கு முத்தமிட்ட அந்தத் தருணம் வாழ்வில் மறக்க முடியாதது.  பிரபுவுக்கு நன்றி.